உள்ளூர் செய்திகள்

இன்ஸ்பெக்டருக்கு விருது

Published On 2022-08-06 09:22 GMT   |   Update On 2022-08-06 09:22 GMT
  • சோழவந்தான் இன்ஸ்பெக்டருக்கு விருது வழங்கப்பட்டது.
  • இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் மதுரை புறநகர் மாவட்ட கிளைஅலுவலகம் திறக்கப்பட்டது.

சோழவந்தான்

சோழவந்தான் காவல் நிலைய ஆய்வாளர் சிவபாலனின் சேவையை பாராட்டி சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை மற்றும் முள்ளிபள்ளம் கிராம மக்கள் சார்பில் விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், முள்ளி பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் ராஜா, பேரூர் தி.மு.க. செயலாளர் சத்திய பிரகாஷ், ஜெனகை மாரியம்மன் கோவில் தல வரலாறு புத்தக வெளியீட்டாளர் ஜனகராஜ், ஜவுளிக்கடை அதிபர் மணி, அறக்கட்டளை நிறுவன தலைவர் செந்தூர் பாண்டியன், மதுரை மாவட்ட தலைவர் செல்வி, பொதுச் செயலாளர் நாகுஆச்சாரி மற்றும் மன்னாடிமங்கலம், முள்ளி பள்ளம் அப்துல் கலாம் அறிவியல் மன்ற நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் மதுரை புறநகர் மாவட்ட கிளைஅலுவலகம் திறக்கப்பட்டது.

Tags:    

Similar News