உள்ளூர் செய்திகள்

சோழவந்தானில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

Published On 2022-09-19 07:56 GMT   |   Update On 2022-09-19 07:56 GMT
  • மதுரை சோழவந்தானில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
  • அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி இந்த கூட்டம் நடந்தது.

சோழவந்தான்

அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி சோழவந்தானில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடந்தது.

தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், நடிகை ரஜினி நிவேதா, தலைமை கழக பேச்சாளர் சின்னையா ஆகியோர் பேசினர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன், கருப்பையா, ஒன்றிய செயலாளர்கள் காளிதாஸ், ரவிசந்திரன், ராஜா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், மருத்துவர் அணி கருப்பையா, மணி, மகளிரணி லட்சுமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன், கூட்டுறவு சங்கத் தலைவர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News