உள்ளூர் செய்திகள்

பைக்கில் சென்ற வாலிபர் தவறி விழுந்து பலி

Published On 2022-08-02 08:36 GMT   |   Update On 2022-08-02 08:36 GMT
  • பைக்கில் சென்ற வாலிபர் தவறி விழுந்து பலியானார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் கள்ளிக்குடியை அடுத்த முனியாண்டிபுரத்தை சேர்ந்தவர் சரவணகுமார்(27). இவருக்கு திருமணமாகி விட்டது. குழந்தை இல்லை.

சம்பவத்தன்று சரவணகுமார் இரு–சக்கர வாகனத்தில் முனியாண்டிபுரம் தோட்டத்து வீட்டிற்கு வந்தபோது கீழே விழுந்து காயம் அடைந்தார். இவரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பினர்.

பரிசோதனை செய்த மருத்துவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து மனைவி யோகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News