உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற பெண் உள்பட 5 பேர் கைது

Published On 2022-08-08 09:48 GMT   |   Update On 2022-08-08 09:48 GMT
  • மதுரையில் கஞ்சா விற்ற பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • மதிச்சியம் போலீசார் கைது செய்தனர்.

மதுரை

மதுரை மாநகரில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. கஞ்சா குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர்.

ஜெய்ஹிந்த்பு ரம் அங்க யற்கண்ணி தெருவில் பெண் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவரிடம் 1.300 கிலோ கஞ்சா, ரூ.11 ஆயிரத்து 240 பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜீவா நகர், மாயாண்டி மனைவி செல்வி (வயது 44) என்பவரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய மகன் காசிமணி (23) என்பவரை தேடி வருகின்றனர்.

மதுரை வ.உ.சி பாலத்தில் கீழ்புறம் கஞ்சா விற்றதாக சத்தியமூர்த்தி நகர் பாரதியார் தெருவை சேர்ந்த ராம்குமார் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கோரிப்பாளையம் லாட்ஜ் அருகில் 200 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மேலத்தோப்பு சரவணன் (43) என்பவரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.

செனாய் நகர், ஜெகஜீவன்ராம் தெருவில் போலீசார் ரோந்து சென்றபோது அங்கிருந்த வாலிபரிடம் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இளமனூர், அன்னை இந்திரா நகர், கண்ணன் மகன் சபரீஷ்வரன் (22) 50 கிராம் கஞ்சாவுடன் மதிச்சியம் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News