உள்ளூர் செய்திகள்

3 பேர் தற்கொலை

Published On 2022-09-06 08:41 GMT   |   Update On 2022-09-06 08:47 GMT
  • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் பிளஸ்-1 மாணவி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • உத்தப்ப நாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மதுரை

மதுரை அருகே உள்ள கள்ளந்திரியை அடுத்த தொப்புளாம்பட்டியை சேர்ந்த மூர்த்தி மகள் அபிநயா (வயது 16). இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்தார்.

அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு மூர்த்தி காப்பு கட்டி இருந்தார். இதனைப் பார்த்த அபிநயா, 'நானும் காப்பு கட்டுவேன்' என்று விருப்பம் தெரிவித்தார். அதற்கு மூர்த்தி சம்மதிக்கவில்லை. மேலும் அவர், மகளை திட்டினாராம். அதில் மனவேதனை அடைந்த அபிநயா, தந்தையிடம் கோபித்துக் கொண்டு பொய்கைகரைப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

அங்கு அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா பரிதாபமாக இறந்தார். அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தினர்.

உசிலம்பட்டியை அடுத்த கொடிக்குளத்தை சேர்ந்த அன்புச்செல்வன் மனைவி ஆனந்தி (42). இவருக்கு வயிற்று வலி இருந்து வந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஆனந்தி, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வாலந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மதுரை நல்லோச்சான்பட்டி, மேல தெருவை சேர்ந்தவர் பாக்யராஜ் (35). வயிற்று வலியால் அவதிப்பட்ட இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை நடந்தது. எனினும் வயிற்றுவலி தொடர்ந்து நீடித்து வந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பாக்யராஜ், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News