உள்ளூர் செய்திகள்

கைதான ராஜா, பாலமுருகன்.

புகையிலை விற்ற 2 பேர் கைது

Published On 2022-07-23 09:46 GMT   |   Update On 2022-07-23 09:46 GMT
  • தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • அவனியாபுரம் பெரியார் நகர் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கார் வந்து நின்றது.

அவனியாபுரம்

அவனியாபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து காவல் உதவி ஆணையாளர் ரமேஷ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அவனியாபுரம் பெரியார் நகர் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கார் வந்து நிற்கவே அதனை போலீசார் சோதனையிட்டனர். அதில் தடை செய்யப்பட்ட 124.320 கிலோ புகையிலை இருப்பதை கண்டு பிடித்தனர்.

காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் விற்பனை செய்வதற்காக புகையிலையை கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் வைத்திருந்த ரூ.15 ஆயிரத்தையும், தடை செய்யப்பட்ட புகையிலையையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மதுரை அய்யர் பங்களா பகுதியைச் சேர்ந்த அர்ஜூனன் மகன் ராஜா(42), தத்தனேரி அருள்தாஸ்புரத்தை சேர்ந்த திருப்பதி மகன் பாலமுருகன் (36)ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News