உள்ளூர் செய்திகள்

ரேசன்அரிசி கடத்திய 2 பேர் கைது

Published On 2022-07-11 07:54 GMT   |   Update On 2022-07-11 07:54 GMT
  • திருமங்கலம் அருகே ரேசன்அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • திருமங்கலத்தில் இருந்து அனுப்பானடிக்கு ரைஸ்மில்லுக்கு ஏற்றி சென்றது தெரிய வந்தது.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து அனுப்பானடிக்கு ரேசன்அரிசி மூடைகளில் கடத்தி செல்லப்படுவதாக கூடக்கோவில் மற்றும் பெருங்குடி போலீசாருக்கு தகவல் வந்தது. 2 காவல் நிலைய போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மதுரை விமானநிலையம் பின்புறம் திருமங்கலத்தில் இருந்து செல்லும் சாலையில் வந்த லோடு வேனை நிறுத்தி ஏட்டு லிங்கம் சோதனை நடத்தியதில் 50 கிலோ ரேசன்அரிசி இருந்தது. அது திருமங்கலத்தில் இருந்து அனுப்பானடிக்கு ரைஸ்மில்லுக்கு ஏற்றி சென்றது தெரிய வந்தது.

வாகனத்தை ஓட்டிவந்த அனுப்பானடியை சேர்ந்த வேல்முருகன் (42), உதவியாளராக வேனில் வந்த ஐராவதநல்லூர் சோவியத் (22) ஆகியோரை போலீசார் கைது செய்து, மதுரை குடிமைபொருள் தடுப்பு குற்றப்புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News