உள்ளூர் செய்திகள்
- உடல்நிலை பாதிப்பால் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
- நாடியம்மன் கோவில் அருகே உள்ள ெரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும்போது மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அருகே உள்ள செருவாவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜப்பா. இவர் மார்க்கெட்டில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இவர் உடல்நிலை பாதிப்பால் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு நடந்து சென்றார். நாடியம்மன் கோவில் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும்பொழுது மயக்கமடைந்து கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் இறந்தார்.இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.