கொடைக்கானல் மேல்மலை கிராமங்கள் செல்லும் சாலைகள் சேதம் வாகன ஓட்டிகள் அவதி
- கொடைக்கானல் நகர் மற்றும் மேல் மலை, கீழ் மலை கிராமங்களில் ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் சாரல் மழை, அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது.
- இந்த மலைச்சாலையை விரைந்து சீரமைக்க பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்காலை:
கொடைக்கானல் நகர் மற்றும் மேல் மலை, கீழ் மலை கிராமங்களில் ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் சாரல் மழை, அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுவது டன் மின்தடையும் ஏற்படு கிறது. இதன்காரணமாக நகர் பகுதி மற்றும் கிராமப் பகுதி பொது மக்கள் கடும் அவதி அடைகின்றனர்.சாலையோரங்கள் மற்றும் மின் கம்பங்கள் உள்ள இடங்களில் விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பல முறை கோரிக்கை வைத்தும் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.
இதேபோல் மேல்மலை கிராமமான மன்னவனூர் பகுதியில் உள்ள நெடுஞ்சா லைக்கு சொந்தமான பிரதான சாலை குண்டும் குழியுமாகவும் சேரும் சகதியுமாகவும் உள்ளது. இதனால் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. நடந்து செல்வதற்கு கூட ஏற்ற சாலைகளாக இல்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு.தற்போது மன்னவனூர் பகுதி சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது.
ஆனால் கொடைக்கா னலில் இருந்து மன்னவனூர் சூழல்சுற்றுலா மையம் செல்லும் வரையிலும் அதைத் தாண்டி கவுஞ்சி, கிளாவரை, பூண்டி உள்ளி ட்ட மலை கிராமங்கள் செல்லும் பிரதான சாலை கள்மிகவும் மோசமாக சிதலமடைந்துள்ளது.இதனால் உள்ளூர் பொது மக்களும் சுற்றுலா பயணி களும் வாகனங்களை இயக்குவதில் சிரமம் அடைந்து வருகின்றனர்.இந்த மலைச்சாலையை விரைந்து சீரமைக்க பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிராமப்புற சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடு த்துள்ளனர்.