search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன ஓட்டிகள் அவதி"

    • மேற்கு ராஜ வீதி வழியாக வடக்கு நோக்கி வரும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது.
    • பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் தென் மாவட்டங்களுக்கும், அதேபோல் அங்கிருந்து வரும் லாரிகள் வட மாநிலங்களுக்கும் சென்று வருகிறது. இதனால் எப்போதும் சென்னிமலை நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்டு.

    சென்னிமலை பஸ் நிலையத்தை கடந்து பெருந்துறை மற்றும் வெள்ளோடு ரோடு வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தெற்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி வழியாக குமரன் சதுக்கத்தை அடைந்து செல்லும் வகையில் ஒரு வழி பாதையாக உள்ளது. அதேபோல் குமரன் சதுக்கம் வழியாக பஸ் நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் வடக்கு ராஜ வீதி மற்றும் கிழக்கு ராஜ வீதி வழியாக செல்லும் வகையில் ஒரு வழி பாதையாக உள்ளது.

    ஆனால் சென்னிமலை முருகன் கோவிலுக்கு கார்களில் வரும் பக்தர்கள் வடக்கு ராஜ வீதி மற்றும் தெற்கு ராஜ வீதி வழியாக பார்க் ரோட்டை அடைந்து முருகன் கோவிலுக்கு செல்லாமல் குமரன் சதுக்கத்தில் இருந்து ஒரு வழிப்பாதையாக உள்ள மேற்கு ராஜவீதி வழியாக நுழைகின்றனர்.

    இதனால் மேற்கு ராஜ வீதி வழியாக வடக்கு நோக்கி வரும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் நூற்றுக்கணக்கான கார்களில் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வருவது உண்டு. அப்போது ஒரு வழிப்பாதையான மேற்கு ராஜ வீதி வழியாக கார்கள் நுழைவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    தினமும் காலை நேரங்களில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள் மேற்கு ராஜ வீதி வழியாக செல்லும்போது மலைக்கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் எதிரே வருவதால் மேற்கொண்டு செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மாலை நேரத்திலும் இதே பிரச்சனை தான் ஏற்படுகிறது.

    சென்னிமலை போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திலேயே மேற்கு ராஜ வீதி இருப்பதால் குமரன் சதுக்கத்தில் இருந்து மேற்கு ராஜ வீதி வழியாக கார்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் எதுவும் செல்லாமல் இருக்க போலீசார் அங்கு கண்காணித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். மேலும் கனரக வாகனங்கள் நகருக்குள் வரால் இருக்க புற வழி சாலை ரிங் ரோடு அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேலம் மாவட்டம் ஏற்காடடில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
    • நேற்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் லேசான மழையாக பெய்தது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடடில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் லேசான மழையாக பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்து வந்த மழை மாலை 5 மணிக்கு மேல் கனமழையாக கொட்டியது.

    ஏற்காடு மலைப்பாதையில் பெய்த மழையால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்தனர். மேலும் மலைபாதையில் உள்ள அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏற்காட்டில் குளிரின் தாக்கமும் அதிகமாக நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    • மின்விளக்குகள் எரியாததால் திருப்பரங்குன்றம் நிலையூர் சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
    • வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள நிலையூர், கைத்தறிநகரில் பல்லாயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து நாள் ேதாறும் ஏராளமானோர் வேலைக்கு நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர். மேலும் மாணவ-மாணவி கள் பள்ளி, கல்லூரி களுக்கு செல்கின்றனர்.

    திருப்பரங்குன்றத்தில் இருந்து நிலையூர் செல்லும் மெயின்ரோடு பெரும் பாலான நேரங்களில் ஆள் நடமாட்டமில்லாமல் இருக்கும். தற்போது இந்த ரோட்டில் மின்விளக்கு களும் பழுதாகி எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் திருப்ப ரங்குன்றம்-நிலையூர் ரோடு இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி செல்ல வேண்டி உள்ளது.

    மோட்டார் சைக்கிளில் பெண், குழந்தைகளுடன் செல்வோர்கள் அச்சத்து டன் செல்ல வேண்டி உள்ளது. மேலும் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள், வழிப் பறி, பணம் பறிப்பு போன்ற செயல்களிலும் ஈடுபடு கின்றனர். போலீசாரும் இந்த பகுதியில் ரோந்து வருவதில்லை என புகார் எழுந்துள்ளது.

    எனவே திருப்பரங் குன்றம்-நிலையூர் ரோட்டில் மின்விளக்குகள் பழுதை சரி செய்து பொதுமக்கள் அச்சமின்றி செல்ல மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாடிப்பட்டி பகுதியில் அதிகாலை பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
    • நீரேத்தான், மேட்டு நீரேத்தான் உள்ளிட்ட பகுதிகளிலும் பனிபொழிவு காணப்பட்டது.

    வாடிப்பட்டி

    இன்று ஐப்பசி மாதம் தொடங்கிய நிலையில் சிறுமலை பகுதியில் மலை முழுவதும் தெரியாதபடி பனிபொழிவு அதிகமாக இருந்தது.

    வாடிப்பட்டி பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. பின் சாறல் மழையும் பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் அதிகாலையில் விராலிப் பட்டி, செம்மினிப்பட்டி, கச்சை கட்டி, குட்லாடம்பட்டி, பூச்சம்பட்டி, ராமயன்பட்டி, தாதப்ப நாயக்கன்பட்டி, தாதம்பட்டி, நீரேத்தான், மேட்டு நீரேத்தான் உள்ளிட்ட பகுதிகளில் பனிபொழிவு காணப்பட்டது.

    இதனால் மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலை, வாடிப்பட்டி நகர்புறசாலை முழுவதும் தெரியாதபடி பனிமூட்டம் அடர்ந்திருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகனங்களை மெதுவாக இயக்கி சென்றனர். காலை 8 மணி வரை பனிமூட்டம் காணப்பட்டது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சாலையோரங்களில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    • பொதுமக்கள் இங்குள்ள குறுகிய அளவில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் தங்களது வாகனங்களை நிறுத்துவதில் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
    • இடிந்து விழும் நிலையிலும் புதர் மண்டியும் உள்ள மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய 2 அலுவலகங்களையும் அகற்றினால் வாகனங்களை நிறுத்துவதில் ஏற்படும் சிரமம் குறையும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அண்ணா சாலை நகரப் பகுதிகளில் மிகவும் பரபரப்பான சாலையாகும். இப்பகுதியில் தாலுகா அலுவலகம், குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலையம், சார்நிலை கருவூலம், சார்பதிவாளர் அலுவலகம், இ-சேவை மையம், குடிமைப் பொருள் வட்ட வழங்கல் அலுவலகம் என அனைத்தும் ஒரே இடத்தில் இயங்கி வருகிறது. பொதுமக்கள் இங்குள்ள குறுகிய அளவில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் தங்களது வாகனங்களை நிறுத்துவதில் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

    பழைய தாலுகா அலுவல கம், பழைய மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவற்றுக்கு மாற்றாக புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டது. ஆனால் இக்கட்டிடங்கள் இடிந்து விடும் நிலையில் இருந்தும் அகற்றாததால் கடும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்த அலுவல கங்களுக்கு நுழையும் வழியில் முன்பு நீதிமன்றமாக இயங்கி வந்து தற்போது குடிமைப்பொருள் வட்ட வழங்கல் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.

    அந்த அலுவலகத்தை பழைய தாலுகா அலுவலகத்துக்கு மாற்றவும், இடிந்து விழும் நிலையிலும் புதர் மண்டியும் உள்ள மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய 2 அலுவலகங்களையும் அகற்றினால் வாகனங்களை நிறுத்துவதில் ஏற்படும் சிரமம் குறையும். மேலும் மிகப் பெரிய அளவில் அமைக்கப்பட்டு வரும் வணிக வளாகப் பகுதியில் கார் பார்க்கிங் வசதி இல்லாததால் அங்கு வரும் பொதுமக்களும் இப்பகுதி யில் தங்கள் வாகனங்களை நிறுத்தும் சூழல் உள்ளது.

    தற்போது இந்த அலுவலகங்களுக்கு செல்லும் சாலைகள் மிகவும் மோசமாக சிதிலம் அடைந்துள்ளது. இதனால் வாகனஓட்டிகள் சிரம மடைந்து வருகின்றனர். எனவே சாலையை விரைந்து சீரமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது. பல்வேறு அலுவலகங்கள் நிறைந்த இப்பகுதியில் முறையான சாலை வசதியையும் கார்கள் நிறுத்தும் வசதியையும் மாவட்ட நிர்வாகம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • மதுரையில் சாலைகளை ஆக்கிரமித்து திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடந்து முடிந்துள்ளன. மேலும் சில பணிகள் நடந்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் பல்வேறு புதிய பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

    பல்வேறு இடங்களில் சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் முக்கிய சாலைகளில் நடுரோட்டை ஆக்கிரமித்து மாடுகள் சுற்றி திரிவது அதிகரித்துள்ளது.

    கே.கே.நகர், பைபாஸ்ரோடு, ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி ரோடு, நத்தம் பாலத்தின் கீழ் பகுதி, கோரிப்பாளையம், அண்ணா பஸ் நிலையம், காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கார்கள், இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் இந்த சாலைகளில் மாடுகள் நடுரோட்டை ஆக்கிரமித்து செல்வது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

    வாகன நெரிசலை கண்டு கொள்ளாமல் மாடுகள் மெதுவாக நடந்து செல்கின்றன. சில இடங்களில் மாடுகள் நடுரோட்டில் படுத்து கிடப்பதையும் காண முடிகிறது. மாடுகள் மீது மோதி விடாமல் இருப்ப தற்காக வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    சில நேரங்களில் வாகன ஓட்டிகளும், ேபாக்குவரத்து போலீசாரும் மாடுகளை துரத்தி விட்டு வாகனங்களை இயக்க வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து பாதிப்பு பற்றி உணராமல் மாடுகளின் உரிமையாளர்கள் அவிழ்த்து விடுகின்றனர்.

    இது மாடுகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மாநகராட்சியில் இருந்து அவ்வப்போது மாடுகளை பிடித்து சென்று உரிமையாளர்களிடம் எச்சரித்து ஒப்படைக் கின்றனர். இருந்தபோதும் நடுரோட்டில் மாடுகள் திரிவது தொடர்கதையாக உள்ளது.

    வாகன நெரிசலை குறைக்க பல்வேறு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் மாடுகள் சாலைகளில் சுற்றி திரியாமல் இருப்பதற்கு மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது.
    • பேருந்து நிலையத்தின் அருகே உள்ள பாலத்தின்கீழ் இரு புறமும் பலா் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண வேண்டும் என்று ஆம்ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.சுந்தரபாண்டியன், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜூக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை சரிவர திட்டமிடாமல் கட்டப்பட்டதன் விளைவாக பெருமாள் கோவில் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும், பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் வாகனங்களும் ஒரே பகுதியில் வரும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பெருமாள் கோவில் வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து திரும்பும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தனியார் ஸ்வீட்ஸ் கடை எதிரில் பாலத்துக்கு கீழ் செல்லும் வகையில் வழி ஏற்படுத்திக் கொடுத்தால் விபத்துகளைத் தவிா்க்கலாம்.

    மேலும் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள பாலத்தின்கீழ் இரு புறமும் பலா் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனா். இத்தகைய சூழ்நிலையில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அங்கு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு பதாகை வைத்துள்ளது போக்குவரத்து நெரிசலை அதிகரிக்கும். ஆகவே, மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்து பழைய பேருந்து நிலையம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
    • 3 இடங்களில் சிறுபாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் இருந்து தர்மபுரி வரை செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக குனிச்சி, லக்கிநாயக்கன்பட்டி உள்ளிட்ட 3 இடங்களில் சிறுபாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் வாகனங்கள் செல்வதற்கு அதன் அருகிலேயே மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் மாற்றுப்பாதையில் செல்ல ஒரே ஒரு இடத்தில் கூட தார் சாலை அமைக்கப்படவில்லை. 3 இடங்களிலுமே மண் நிரப்பப்பட்டு ஜல்லிக்கற்கள் மட்டுமே போடப்பட்டு பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் கரடுமுரடான மாற்றுப்பாதையில் சென்று வருகின்றன. இந்த மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்லும்போது, நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்க வாகனங்களில் செல் வோரின் கண்களில் மண்துகள்கள் விழுந்து இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

    மேலும் ஜல்லி கற்களில் இருசக்கர வாகனங்களில் செல் வோர் தவறி கீழே விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை, சம்பந்தப்பட்டதுறை அதிகா ரிகள் சிறு பாலங்கள் அமைக்கும் மூன்று இடங்களிலும் தார் சாலை அமைக்க வேண்டும் அல்லது காலை மாலை இரு வேளையிலும் டிராக்டர் மூலம் தண்ணீர் தெளிக்கவும், மாற் றுப்பாதையில் விபத்துக்கள் ஏற்படா வண்ணம் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொழிற்சாலைகள் நிறைந்த ஒரகடம் பகுதியில் மாசு கட்டுப்பாட்டு அலுவலகம் உள்ளது.
    • ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலை வண்டலூர் வாலாஜாபாத் செல்லும் சாலை பகுதிகளில் குப்பை கழிவுகளை கொட்டி எரிப்பதால் கரும் புகை வெளியேறி வருகிறது.

    ஒரகடம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளது. தொழிற்சாலைகள் நிறைந்த இதே ஒரகடம் பகுதியில் மாசு கட்டுப்பாட்டு அலுவலகம் உள்ளது.

    இந்த நிலையில் ஓரகடம் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலை வண்டலூர் வாலாஜாபாத் செல்லும் சாலை பகுதிகளில் குப்பை கழிவுகளை கொட்டி எரிப்பதால் கரும் புகை வெளியேறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கண் எரிச்சல் ஏற்பட்டு வாகனங்களை ஓட்டி அவதி அடைந்து விபத்து ஏற்படும் வகையில் செல்கின்றனர்.

    இதனால் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த மக்களும் பாதிப்படைகின்றனர். இதனால் மாசு கலந்த காற்றை சுவாசிக்க வேண்டிய நிலை உள்ளது.

    எனவே குப்பைக் கழிவுகளை கொட்டி எரிப்பதை தடுக்க ஒரகடம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தென்பெண்ணை ஆற்று பாலத்தின் வழியாக செல்கின்றனர்.
    • இரவு நேரங்களில் ட்யூப் லைட்களின் வெளிச்சம் போதுமான அளவு பாலத்தின் மீது விழுவதில்லை.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் இருந்து பள்ளி கல்லூரி மாணவர்கள்,வேலைக்கு செல்பவர்கள் என தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தென்பெண்ணை ஆற்று பாலத்தின் வழியாக கிருஷ்ணகிரி, ஓசூர், திருப்பத்தூர்,பெங்களூர் போன்ற ஊர்களுக்கு சென்று வருகின்றனர் .

    மேலும் பாலத்தை தாண்டி சினிமா தியேட்டர் மற்றும் ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இரவு நேரங்களில் சினிமா பார்த்துவிட்டு வருபவர்கள் இப் பாலத்தின் வழியாக வரும்பொழுது மிகவும் அச்சத்துடன் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இப்பாலத்தில் உள்ள மின் விளக்குகள் சரிவர பராமரிக்கப்படாத காரணத்தால் சரியாக எரிவதில்லை. மேலும் பாலத்தில் உள்ள மின் விளக்குகள் அனைத்தும் ட்யூப் லைட்கள் என்பதால் இதன் வெளிச்சம் போதுமான அளவு பாலத்தின் மீது விழுவதில்லை.

    இதனால் பாலத்தின் மீது வரும் பெண்கள் மிகவும் அச்சத்துடன் வழிப்பறி ஏதாவது நடந்து விடுமோ என்ன அச்சத்துடன் வந்து செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.வாகன ஓட்டிகளுக்கு தேவையான வளிச்சம் கிடைக்காததால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தின் மீது அதிகம் வெளிச்சம் தரக்கூடிய லைட்டுகளை பொருத்தி கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பாதை எது, குழி எது என்று தெரியாமல், 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் உள்ள மண் திட்டு மீது மோதி விபத்துக்கு ள்ளானது.
    • சம்மந்த ப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூடவேண்டும்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டியில் இருந்து போச்சம்பள்ளி செல்லும் சாலையில் உள்ள நேரு நகர் அருகே சாலை ஒரத்தில் கூட்டு குடிநீர் இணைப்பு கொடுப்பதற்கு பள்ளம் தோண்டும் குழாய் உடைப்பு ஏற்பட்டது.

    இந்த குழாய் அடைப்பை சரி செய்ய தோண்டப்பட்ட மண்ணை சாலையில் கொட்டிவிட்டு எந்த அறிவிப்பு பலகையும் வைக்காமல் அலட்சியமாக அப்படியே விட்டு சென்று விட்டனர்.

    இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் பாதை எது, குழி எது என்று தெரியாமல், 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் உள்ள மண் திட்டு மீது மோதி விபத்துக்கு ள்ளானது.

    இது குறித்து சம்மந்த ப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூடவேண்டும் என்று வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. பல இடங்களில் கற்கள் பெயர்ந்து பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.
    • சிதறி கிடக்கும் கற்கள் வாகன ஓட்டிகளின் டயர்களை பதம் பார்ப்பதால் அடிக்கடி பஞ்சர் ஆகின்றன.

    நத்தம்:

    நத்தம்-மதுரை செல்லும் சாலையில் கோவில்பட்டி, வத்திப்பட்டி, பரளி, செல்லப்பநாயக்கன்பட்டி, பண்ணுவார்பட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. நத்தத்தில் இருந்து மதுரை செல்லும் முக்கிய வழித்தடம் என்பதால் அரசு, தனியார் பஸ், லாரி, கார், வேன், பள்ளி வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.

    இந்த சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. பல இடங்களில் கற்கள் பெயர்ந்து பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. சிதறி கிடக்கும் கற்கள் வாகன ஓட்டிகளின் டயர்களை பதம் பார்ப்பதால் அடிக்கடி பஞ்சர் ஆகின்றன. இதனால் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள்கூட செல்ல முடியவில்லை.

    எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×