search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "middle of the road"

    • ரோட்டில் இருந்த பாலம் உடைந்து குழி ஏற்பட்டு விட்டது.
    • பஸ் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சி, அம்மன்கோவில் புதூரில் இருந்து முருங்கத்தொழுவு செல்லும் ரோட்டில் இருந்த பாலம் உடைந்து குழி ஏற்பட்டு விட்டது.

    இந்த ரோட்டில் அரசு டவுன் பஸ் மட்டும் அல்லாமல், தனியார் நிறுவன கம்பெனி பஸ்கள், லாரிகள் என போக்குவரத்து மிகுந்த ரோடு. மேலும் இருசக்கர வாகனங்களும் அதிக அளவில் செல்கிறது. இந்த நிலையில் இந்த குழி ஏற்பட்டு கடந்த 3 மாதங்களாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

    தற்போது ரோட்டின் 2 பக்கமும் குழி ஏற்பட்டு பஸ் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் பஸ் போக்குவரத்து இன்றி தடுமாறி வருகின்றனர்.

    மேலும் இந்த இடத்தில் இரவு நேரத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் முன்னதாவது அதிகாரிகள் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி நின்றது.
    • காரில் இருந்த வாலிபருக்கு காயம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் இருந்து நேற்று மாலை ஈரோடு நோக்கி வந்த சொகுசு கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சூளை, பாரதி நகர் பகுதியில் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி நின்றது.

    இந்த விபத்தில் காரின் முன் பகுதி சேதம் அடைந்தது. காரில் இருந்த வாலிபருக்கு காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த நபர் சிகிச்சைக்காக அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொ ண்டனர். விசாரணையில், சொகுசு காரில் வந்தவர் மூலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஸ்ரீராம் ( 27 ) என்பதும், இவரின் கல்லூரி சான்றிதழ் பெறுவதற்காக தனியார் கல்லூரி சென்று வீடு திரும்பி கொண்டிருந்த போது இந்த விபத்து நடைபெற்றதாகவும் தெரிய வந்தது.

    விபத்து நடந்த பொழுது அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான பரபரப்பு காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    அதிகளவில் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் பயணிக்கும் சூளை பகுதியில் தொடர்ந்து இது போன்ற விபத்துகள் ஏற்படுவதால் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையில் திடீரென நடுரோட்டில் உருண்டு புரண்டு போராட்டம் செய்தார்.
    • இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி கீதா.இவர்கள் 2 பேருமே ஆட்டோ டிரைவர்கள். இவர்களுக்கு யோகேஸ்வரன் (22) என்ற மகன் உள்ளார்.இவர் ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் சந்திசேகருக்கு கையில் அடிப்பட்டதால் அவர் ஆட்டோ ஓட்டாமல் வீட்டில் இருந்து வருகிறார். இதையடுத்து அவரது மனைவி கீதா மட்டும் ஆட்ேடா ஓட்டி குடும்பத்தை நடத்தி வருகிறார்.

    இவர்களது மகன் யோகேஸ்வரன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடிய வில்லை.

    இதையடுத்து கீதா வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். ஆனால் இதுவரையும் மாயமான யோகேஸ்வரன் பற்றி எந்த தகவலும் இல்லை.

    இதையடுத்து இன்று காலை 9 மணியளவில் கீதா ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் திடீரென நடுரோட்டில் உருண்டு புரண்டு போராட்டம் செய்தார்.

    இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து பெண் ஆட்டோ டிரைவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர் மாயமான என் மகனை மீட்டுத்தர வேண்டும். சர்வ சாதாரணமாக போதை பொருட்கள் கிடைக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

    பின்னர் பெண் போலீசார் உதவியுடன் கீதாவை போலீசார் மீட்டனர். பின்னர் அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்தனர்.

    அப்போது தான் ஆட்டோவில் வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ரோட்டின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது.
    • வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே அத்தாணி அந்தியூர் ரோடு அமைந்துள்ளது. இந்த ரோடு சத்தியமங்கலம், கோபிசெட்டி பாளையம், கோவை, கேரளா மாநில த்துக்கு செல்லும் சாலையாக இருந்து வருகிறது.

    இதனால் இந்த வழியாக தினமும் கார், வேன், பஸ், சரக்கு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.

    மேலும் இந்த வழி அரசு உயர்நிலை பள்ளிக்கும், அரசு பணி மனைக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாகவும் விளங்கி வருகிறது.

    இந்த நிலையில் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே ரோட்டின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வரு கிறார்கள்.

    இந்த வழியாக பள்ளிக் குழந்தைகள் இரு சக்கர வாகனத்தில் வரும் பொதுமக்கள் தட்டுதடுமாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இரவு நேரங்களிலும், பகல் நேரங்களிலும் எதிர்பாராமல் பள்ளம் இருப்பது தெரியாமல் சிலர் வந்து கீழே விழும் அவல நிலை ஏற்பட்டு வருகின்றது.

    மேலும் இந்த பள்ளத்தால் விபத்து அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே இந்த பகுதியில் ரோட்டின் நடுவே உள்ள பள்ளத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×