search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரோட்டின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி
    X

    ரோட்டின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

    • ரோட்டின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது.
    • வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே அத்தாணி அந்தியூர் ரோடு அமைந்துள்ளது. இந்த ரோடு சத்தியமங்கலம், கோபிசெட்டி பாளையம், கோவை, கேரளா மாநில த்துக்கு செல்லும் சாலையாக இருந்து வருகிறது.

    இதனால் இந்த வழியாக தினமும் கார், வேன், பஸ், சரக்கு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.

    மேலும் இந்த வழி அரசு உயர்நிலை பள்ளிக்கும், அரசு பணி மனைக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாகவும் விளங்கி வருகிறது.

    இந்த நிலையில் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே ரோட்டின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வரு கிறார்கள்.

    இந்த வழியாக பள்ளிக் குழந்தைகள் இரு சக்கர வாகனத்தில் வரும் பொதுமக்கள் தட்டுதடுமாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இரவு நேரங்களிலும், பகல் நேரங்களிலும் எதிர்பாராமல் பள்ளம் இருப்பது தெரியாமல் சிலர் வந்து கீழே விழும் அவல நிலை ஏற்பட்டு வருகின்றது.

    மேலும் இந்த பள்ளத்தால் விபத்து அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே இந்த பகுதியில் ரோட்டின் நடுவே உள்ள பள்ளத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×