search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாட்டுநல்லூர் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி
    X

    பெருமாட்டுநல்லூர் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

    • செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து சாலைகளிலும் மாடுகள் சுற்றித்திரிவது தொடர் கதையாக உள்ளது.
    • கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் நடுவில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன.

    கூடுவாஞ்சேரி:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பலமுறை எச்சரிக்கை விடுத்தும் இதனை சிறிதளவும் கண்டுகொள்ளாமல் மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்கள் நடந்து கொள்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து சாலைகளிலும் மாடுகள் சுற்றித்திரிவது தொடர் கதையாக உள்ளது.

    உள்ளாட்சி நிர்வாகங்கள் ஏதோ கலெக்டர் உத்தரவு போட்ட காரணத்தால் ஒரு சில இடங்களில் மட்டும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை உள்ளாட்சி அமைப்புகள் பிடித்து அபராதம் விதித்து வருகிறது. ஆனால் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதும் கிடையாது. இதனால் தொடர்ந்து மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்கள் அலட்சிய போக்கு காட்டி வருவதாலும் உள்ளாட்சி அமைப்புகள் அதனை கண்டும் காணாமல் இருப்பதால் மாடுகளை வளர்க்கும் நபர்கள் தங்களது மாடுகளை வீட்டில் கட்டி வைத்து வளர்ப்பது இல்லை என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் நடுவில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. அங்கேயே படுத்து கொள்கிறது. அதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் உத்தரவுகளை உள்ளாட்சி அமைப்புகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×