search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடும் பனி மூட்டம்- வாகன ஓட்டிகள் அவதி
    X

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடும் பனி மூட்டம்- வாகன ஓட்டிகள் அவதி

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது.
    • அதிகாலையில் சாலையே தெரியாத அளவுக்கு புகைபோல் பனி படர்ந்து காணப்பட்டது.

    பொன்னேரி:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது. காலை 8 மணி வரை பனிமூட்டம் நீடித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    சில நாட்கள் பனியின் தாக்கம் குறைந்து இருந்தாலும் மீண்டும் பனிமூட்டம் அதிகரித்து வருகிறது.

    இன்று காலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியது. இதே போல் திருவள்ளூர் மாவட்டத்திலும் பனியின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை பனிமூட்டம் அதிகம் இருந்தது.

    அதிகாலையில் சாலையே தெரியாத அளவுக்கு புகைபோல் பனி படர்ந்து காணப்பட்டது. சாலையில் முன்னால் மற்றும் எதிரே வந்த வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி காணப்பட்டது. காலை 8 மணி வரை பனியின் தாக்கம் இருந்தது.

    இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன. காலை 8 மணிக்கு பின்னரே பனியின் தாக்கம் மெல்ல மெல்ல குறைய தொடங்கி இயல்பு நிலைக்கு திரும்பியது.

    Next Story
    ×