உள்ளூர் செய்திகள்

கட்டளை மேட்டு வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம்

Published On 2022-08-18 09:13 GMT   |   Update On 2022-08-18 09:13 GMT
  • கட்டளை மேட்டு வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது
  • சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டன

கரூர்:

மகாதானபுரத்தில் கட்டளை மேட்டு வாய்க்கால் வலது கரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. கரூர் மாவட்டம் மகாதானபுரம் வடக்கு பகுதியில் கட்டளை மேட்டு வாய்க்கால் பிரிவு வாய்க்காலின் வலது கரையில் கம்பி வேலி அமைத்து தனியார் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இது தொடர்பாக புகார்கள் வரபெற்றதை அடுத்து சர்வே (நில அளவீடு) பணிகள் மேற்கொள்ளப்பட்டு கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் முருகன் தலைமையில் மாயனூர் நீர்வளத்துறை உதவி பொறியாளர் ஸ்ரீதர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன.

Tags:    

Similar News