உள்ளூர் செய்திகள்
மதுபானங்களை பதுக்கி விற்ற 6 பேர் மீது வழக்கு
- மதுபானங்களை பதுக்கி விற்ற 6 பேர் மீது வழக்கு பதியபட்டது
- அவர்களிடம் இருந்து 36 குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
கரூர்:
கரூர் மாவட்டத்தில் 90 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. பகல் 12 மணி முதல் 10 மணி வரை கடைகள் செயல்படுகின்றன. இந்த நேரம் தவிர்த்து மற்ற நேரத்தில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது குறித்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அந்தவகையில், வாங்கல், சின்னதாராபுரம் போன்ற பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விற்பனை செய்ய முயன்றதாக 6 பேர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்து 36 குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.