உள்ளூர் செய்திகள்

கொல்லங்கோடு அருகே அனுமதியின்றி மது விற்ற வாலிபர் கைது

Published On 2022-06-24 07:43 GMT   |   Update On 2022-06-24 07:43 GMT
  • மேடவிளாகம் பகுதியில் உள்ள கோழிக்கடையில் சோதனை மேற்கொண்டனர்
  • 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

நாகர்கோவில் :

கொல்லங்கோடு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கொல்லங்கோடு மேடவிளாகம் பகுதியில் உள்ள கோழிக்கடையில் சோதனை மேற்கொண்டனர். இதில் அங்கு பதுக்கி வைத்திருந்த 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக மது பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர் வள்ளவிளை புதுவல்புத்தன்வீடு பகுதியைச் சேர்ந்த முகம்மது அசிம் (வயது 27) என்பவரை கைது செய்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News