உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டி அருகே ஜவுளிக்கடை ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு

Published On 2023-10-03 07:52 GMT   |   Update On 2023-10-03 07:52 GMT
  • சிமெண்ட் ஓடு போட்டவீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கடலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
  • 9½ பவுன் நகை மற்றும் ரூ. 95ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது.

விழுப்புரம்:

விக்கிரவாண்டி அருகே உள்ள வாழப்பட்டு கிரா மத்தைச் சேர்ந்தவர் ராற் குமார் (வயது49). இவர் விழுப்புரத்தில் துணிக்க டையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 30 -ந் தேதி மாலை 5 மணிக்கு தனது சிமெண்ட் ஓடு போட்டவீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கடலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று பிற்பகல் 2 மணி அளவில் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 9½ பவுன் நகை மற்றும் ரூ. 95ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது. இது பற்றி கெடார் போலீ சில் புகார் செய்ததின்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் விவே கானந்தன் வழக்கு பதிந்து நகை-பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.

Tags:    

Similar News