search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிமெண்ட் ஓடு"

    • சிமெண்ட் ஓடு போட்டவீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கடலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
    • 9½ பவுன் நகை மற்றும் ரூ. 95ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே உள்ள வாழப்பட்டு கிரா மத்தைச் சேர்ந்தவர் ராற் குமார் (வயது49). இவர் விழுப்புரத்தில் துணிக்க டையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 30 -ந் தேதி மாலை 5 மணிக்கு தனது சிமெண்ட் ஓடு போட்டவீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கடலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று பிற்பகல் 2 மணி அளவில் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 9½ பவுன் நகை மற்றும் ரூ. 95ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது. இது பற்றி கெடார் போலீ சில் புகார் செய்ததின்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் விவே கானந்தன் வழக்கு பதிந்து நகை-பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.

    ×