உள்ளூர் செய்திகள்

இளம்பெண்ணை கத்தியால் குத்திய கணவர் கைது

Published On 2022-09-27 10:23 GMT   |   Update On 2022-09-27 10:23 GMT
  • ஐசக் சாமுவேல் தினமும் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்துள்ளார்.
  • ஆத்திரமடைந்த ஐசக் சாமுவேல் மனைவியை கத்தியால் குத்தினார்.

நெல்லை:

பாளை கோரிப்பள்ளம் மாத்தியூ தெருவை சேர்ந்தவர் ஐசக் சாமுவேல் (வயது 29). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. ஐசக் சாமுவேல் தினமும் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்துள்ளார்.

நேற்று வழக்கம் போல மதுகுடித்துவிட்டு வந்துள்ளார். இதனால் அவருக்கும், சித்ராவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த ஐசக் சாமுவேல் மனைவியை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சித்ராவை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சித்ரா கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த பாளை போலீசார் ஐசக் சாமுவேலை கைது செய்தனர்.

Tags:    

Similar News