உள்ளூர் செய்திகள்

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-11 09:48 GMT   |   Update On 2022-07-11 10:01 GMT
  • ஆனால் இழப்பீடு தொகை குறைவாக வழங்குவதாக கூறி விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
  • ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தஞ்சாவூர்:

கும்பகோணம் புறவழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இழப்பீடு தொகை குறைவாக வழங்குவதாக கூறி விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் இழப்பீட்டுத் தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தஞ்சை வடக்கு மாவட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனு கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.

Tags:    

Similar News