உள்ளூர் செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார்

பணம் கொடுத்து ஆள் பிடித்து வருகிறார் ஓபிஎஸ்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார்

Published On 2022-08-28 13:18 GMT   |   Update On 2022-08-28 13:18 GMT
  • பணம் பாதாளம் வரை பாயும், முதல்கட்டமாக அய்யப்பனை பிடித்துள்ளனர்.
  • அதிமுகவில் சசிகலா, தினகரன், ஓபிஎஸ்க்கு என்றுமே இடம் கிடையாது.

மறைந்த அதிமுக நிர்வாகி தனசேகர் நினைவு கோப்பை கால்பந்து போட்டியினை சென்னையில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

பணம் கொடுத்து கட்சிக்கு ஆள் பிடிக்கும் நடவடிக்கையில் ஓபிஎஸ் ஈடுபட்டு வருகிறார். அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் தாவுவதால் அதிமுகவுக்கு பின்னடைவு இல்லை. பணம் பாதாளம் வரை பாயும். தினகரன், சசிகலா, ஓபிஎஸ் இடம் பணம் கோடிக் கோடியாக உள்ளது. முதல்கட்டமாக அய்யப்பனை பிடித்துள்ளனர்.

அதிமுக என்ற கட்சி தலைவர்களை நம்பியோ, சட்டமன்ற உறுப்பினர்களை நம்பியோ, எம்பிக்களை நம்பியோ ஆரம்பிக்கப்படவில்லை. தொண்டர்களை நம்பித்தான் அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பித்தார். பன்னீர்செல்வம் மகா நடிகர், இவர் நடிகனாக இருந்திருந்தால் ரஜினி, சிவாஜியை தோற்கடித்து ஆஸ்கர் விருதை பெற்று இருப்பார்.

தேர்தலில் அதிமுக வெற்றி பெறக் கூடாது என்ற எண்ணத்தில் பன்னீர் செல்வத்தின் செயல்பாடு இருந்தன அதிமுகவில் சசிகலா, தினகரன், ஓபிஎஸ்க்கு என்றுமே இடம் கிடையாது. சுருக்கமான சொல்ல வேண்டும் என்றால் கறந்த பால் மடிபுகாது, கருவாடு மீனாகாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News