உள்ளூர் செய்திகள்

ஆட்டோ நிறுத்தியதில் தகராறு-மோதல்

Published On 2022-06-28 08:52 GMT   |   Update On 2022-06-28 08:52 GMT
  • பரமத்திவேலூர் அருகே ஆட்டோ நிறுத்தியதில் தகராறு-மோதல் ஏற்பட்டது.
  • இதை தடுக்கச் சென்ற கவுரிசங்கர் மீது கல் விழுந்தது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது23).

இவரும், அவரது நண்பர் சாலப் பாளையத்தைச் சேர்ந்த கவுரிசங்கர்(23) ஆகிய இருவரும் ஜங்கமநா–யக்கன்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார்(29) என்பவர் ஓட்டலுக்கு குடிபோதையில் வந்தார். ஓட்டல் வெளியே நின்று கொண்டிருந்த ஆட்டோவை ஓரமாக நிறுத்த முடியாதா? உடனே எடுங்கள் என்று கூறியுள்ளார் .

அதற்கு பிரபாகரனுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த ஆனந்தகுமார் அங்கு கிடந்த கல்லை எடுத்து ஆட்டோ மீது போட முயன்றார். இதை தடுக்கச் சென்ற கவுரிசங்கர் மீது கல் விழுந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இது குறித்து பிரபாகரன் பரமத்தி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரித்து தகராறில் ஈடுபட்ட ஆனந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்தார்.

அதேபோல் தன்னிடம் தகராறில் ஈடுபட்டதாக ஆனந்தகுமார் புகாரின்பேரில் பிரபாகரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News