உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

சேலத்தில் தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

Published On 2022-08-01 09:02 GMT   |   Update On 2022-08-01 09:02 GMT
  • விவசாய தொழிலாளர் சங்கத்தில் சார்பில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனை நிலம் ஒதுக்கி பத்து லட்ச ரூபாய் வீடு கட்டி கொடுக்க வேண்டும்.

சேலம்:

தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை நாள் ஒன்று கூலி ரூ 600 ஆக உயர்த்திட நகர்புறங்களில் இத்திட்டத்தை விரிவுப்படுத்திட கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தில் சார்பில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சங்கர் தொடக்க உரை ஆற்றினர். இதில்மாவட்டச் உதயகுமார், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, கணபதி உட்பட பலர் கண்டன உரையாற்றினார்.

வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனை நிலம் ஒதுக்கி பத்து லட்ச ரூபாய் வீடு கட்டி கொடுக்க வேண்டும்,விலைவாசி உயர்வு வேலையின்மை கருத்தில் கொண்டு ஊதிய குழு பரிந்துரை அடிப்படையில் விவசாய தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.

Tags:    

Similar News