உள்ளூர் செய்திகள்

கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கும்பகோணத்தில், ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-27 10:10 GMT   |   Update On 2023-08-27 10:10 GMT
  • கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற வேண்டும்.
  • தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்:

தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து உழவர் உரிமை இயக்கம் விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிறுவனர் குடந்தை அரசன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பா ட்டத்தில் கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தியும், கர்நாடக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் தமிழ்தேசப் பேரி யக்க தலைமை செயற்குழு உறுப்பினர் விடுதலை சுடர், தீந்தமிழன், அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் படிப்பு வட்ட தலைவர் லூர்துசாமி, சமூகநீதி பாதுகாப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வக்கீல் நந்திவனம் பாலா, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சேகர், திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் சித்தாடி ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News