உள்ளூர் செய்திகள்

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா நேரில் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்து படம்.

கடலூர் :மாநகராட்சி பகுதிகளில்தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணிகள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு

Published On 2023-11-16 07:46 GMT   |   Update On 2023-11-16 07:46 GMT
வடிகால் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து அமைக்கப்பட்டி ருந்த விளக்க புகைப்படங்க ளையும் பார்வையிட்டார்.

கடலூர்:

கடலூர் மாநகராட்சிக் குட்பட்ட பல்வேறு பகுதி களில் மழைநீர் அகற்றும் பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக மாநகராட்சிக் குட்பட்ட கார்த்திகேயன் நகர் பகுதியில் மழைநீர் அகற்றும் பணிகள் நடைபெறுவதையும், வில்வநகர் பகுதியில் உள்ள பெருமாள் குளத்தில் மழைநீர் வெளியேற்றும் பணிகளையும், அதனருகே மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து அமைக்கப்பட்டி ருந்த விளக்க புகைப்படங்க ளையும் பார்வையிட்டார். கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணையாற்றின் நீர்வரத்தை பார்வையிட்டு, அதனருகே நெடுஞ்சாலை துறை மற்றும் நீர்வளத்துறை மூலம் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த விளக்க புகைப்படங்க ளையும் பார்வையிட்டார். கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில பொது மக்கள் பேரிடர் தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் தெரிவிக்கும் வகையில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து வருவாய் த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பொதுப் பணித்துறை, தீயணைப் புத்துறை, காவல்துறை, நீர்வளத்துறை மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்க ளிடம் வடகிழக்கு பருவ மழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கனமழை எற்படும் போது அதனை பொதுமக்களுக்கு எவ்வித பதிப்புக்கள் இல்லாமல் எதிர்கொள்ளும் அளவிற்கு அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் அறிவுறுத்தினார்.அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் இராஜ சேகரன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரண்யா , மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் அவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

Tags:    

Similar News