உள்ளூர் செய்திகள்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

Published On 2022-07-09 10:18 GMT   |   Update On 2022-07-09 10:18 GMT
  • பருத்தி ஏலத்தில் பாபநாசம் சுற்றியுள்ள கிராமத்திலிருந்து மொத்தம் 2287 லாட், சுமார் 3542.70 குவிண்டால் பருத்தி கொண்டுவரப்பெற்றது.
  • கும்பகோணம், பண்ரூட்டி, திருப்பூர், தேனி மற்றும் செம்பனார்கோவில், குன்னூர், தெலுங்கானா சார்ந்த 11 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.

பாபநாசம்:

தஞ்சாவூர் விற்பனைக்குழு, விளம்பரம் மற்றும் பிரசாரம் கண்காணிப்பாளர் சித்தார்த்தன் தலைமையிலும், தஞ்சாவூர் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் முருகானந்தம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி, மேற்பார்வையாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

பருத்தி ஏலத்தில் பாபநாசம் சுற்றியுள்ள கிராமத்திலிருந்து மொத்தம் 2287 லாட், சுமார் 3542.70 குவிண்டால் பருத்தி கொண்டுவரப்பெற்றது. கும்பகோணம், பண்ரூட்டி, திருப்பூர், தேனி மற்றும் செம்பனார்கோவில், குன்னூர், தெலுங்கானா சார்ந்த 11 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ.3 கோடி ஆகும். இதில் தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை ரூ.9,719/- குறைந்தபட்ச விலை ரூ.8,149/- சராசரி மதிப்பு ரூ.9,000/- என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பாபநாசம் போலீசார்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News