உள்ளூர் செய்திகள்
அக்கரைப்பட்டியில் ரூ.60 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
- சேலம், ஆத்தூர், ராசிபுரம், அவிநாசி உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை எடுத்தனர்.
- ராசிபுரம் அருகே உள்ள அக்கரைபட்டியில் பருத்தி ஏலம் நடந்தது.
ராசிபுரம்:
ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் ராசிபுரம் அருகே உள்ள அக்கரைபட்டியில் பருத்தி ஏலம் நடந்தது.
ஏலத்தில் மல்லசமுத்திரம், வையப்பமலை, பெரிய மணலி, சின்ன மணலி, மதியம்பட்டி, அக்க–ரைப்பட்டி, மின்னாம்பள்ளி, சவுதாபுரம், நாட்டாமங்கலம், எலச்சிபாளையம், கோக்களை உள்பட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பருத்தி ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
சேலம், ஆத்தூர், ராசிபுரம், அவிநாசி உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை எடுத்தனர். நேற்று நடந்த இந்த ஏலத்தில் 1947 சுரபிரக பருத்தி மூட்டைகள் ரூ.60 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. அப்போது சுரபி ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.8250-க்கும், அதிகபபட்சமாக ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.9761-க்கு விடப்பட்டது.