உள்ளூர் செய்திகள்

அறிவியல் பூங்கா கட்டுமான பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அறிவியல் பூங்கா அமைக்கும் பணி- அதிகாரி ஆய்வு

Published On 2022-09-24 10:49 GMT   |   Update On 2022-09-24 10:49 GMT
  • உணவு தயாரிப்பதற்காக தனியாக கூட்டுறவு காலனியில் பொது சமையல் கூடம் உள்ளது.
  • மேலவஸ்தாசாவடியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் உள்ள குளம் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை பணிகளின் முன்னேற்றம் குறித்தும், பேரிடர் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.

தஞ்சை மாவட்ட கண்காணிப்பு அலுவ லரும், டான்சி நிர்வாகி இயக்குனருமான விஜயகுமார் தலைமை தாங்கி பேசினார்.

முன்னதாக தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள 8 தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது‌‌.

இவர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக தனியாக கூட்டுறவு காலனியில் பொது சமையல் கூடம் உள்ளது ‌.

இங்கிருந்து சமைத்து எடுத்து செல்லப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதனை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது சமையல் கூடத்தில் சமைக்கும் இடம், பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அறை, மாணவர்களுக்கு உணவு எடுத்து செல்லும் வாகனம், பாத்திரங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அருகில் கூட்டுறவு காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதையும் உணவு தரமாக உள்ளதா என சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

பின்னர் அருளானந்த நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் அறிவியல் பூங்கா, மேலவஸ்தா சாவடியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் உள்ள குளம் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News