search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Food"

    • குறிப்பாக யானைகள் உணவு, தண்ணீருக்காக ஊருக்குள் புகுவதும், பயிர்களை நாசம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
    • சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு அழைத்து சென்றுவிட்டனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்கு வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் உணவு, தண்ணீருக்காக ஊருக்குள் புகுவதும், பயிர்களை நாசம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் ஆசனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அரோபாளையம் கிராமத்தில் இன்று காலை 6 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு குட்டி யானை அங்கு உலா வந்தது.

    இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உடனடியாக ஆசனூர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். குட்டி யானை அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு அழைத்து சென்று விட்டனர். குட்டி யானை வனப்பகுதியில் இருந்து எப்படி வெளியே வந்தது என தெரியவில்லை.

    இந்நிலையில் அந்த குட்டி யானை கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவானிசாகர் வனப்பகுதியில் விடப்பட்ட குட்டி யானை என ஒரு தகவல் பரவியது. ஆனால் இது குறித்து வனத்துறையினர் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை.

    • முதலில் சாப்பிட்ட மாணவிகள் 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவை ஏற்பட்டது.
    • உணவை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது.

    இந்த விடுதியில் தங்கி பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மாணவிகள் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விடுதியில் நேற்று இரவு மாணவிகளுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டது. முதலில் சாப்பிட்ட மாணவிகள் 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவை ஏற்பட்டது. இதனால் மற்ற மாணவிகள் உணவு சாப்பிட தயக்கம் காட்டினர்.

    இது குறித்து விடுதி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மாணவிகளுக்காக தயார் செய்து வைத்திருந்த உணவின் தரம் மற்றும் சமையல் அறை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் உணவை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே விடுதியில் உணவு சாப்பிட்ட காவியா (வயது14), நாகலட்சுமி (14), ஜெயப்பிரியா (13), நிரோஷா (13), பாவனா (17), இந்துஜா (13), யமுனா (15), கோபிகா (17), கோகிலா (16) உள்ளிட்ட 10 மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சக மாணவிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவிகளுக்கு தரமான உணவு, சுகாதாரமான முறையில் தயார் செய்து வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோத்தகிரி அடுத்த கெரடா குடியிருப்பு பகுதிக்கு வந்தது.
    • சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கரடி, சிறுத்தை, காட்டுமாடு, யானை போன்ற வனவிலங்குகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே பெரும்பாலான விலங்குகள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் மலைஅடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்து வருகின்றன. இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் மனிதன்-விலங்கு மோதல் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு ஒரு கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோத்தகிரி அடுத்த கெரடா குடியிருப்பு பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கு பூட்டியிருந்த கேட்டை தாண்டி வீட்டுக்குள் புகுந்தது. தொடர்ந்து மாடிப்படிக்கட்டில் ஏறிய கரடி உணவு தேடி சுற்றி திரிந்தது. அங்கு சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காததால் அந்த கரடி மீண்டும் வந்த வழியாக திரும்பி காட்டுக்குள் சென்றுவிட்டது. இது அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    கெரடா குடியிருப்புக்குள் புகுந்த கரடி பூட்டிய வீட்டின் கேட்டை தாண்டி மாடிப்படிக்கு சென்று உணவு தேடிய சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஊருக்குள் நுழையும் கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவிக்க வேண்டுமென குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 2020ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து வழக்கு.
    • தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

    பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

    14 பொருட்களுக்கு தடை விதித்து 2018ல் உத்தரவிட்ட நிலையில், உணவுப் பொருட்களை அடைக்கும் கவர்களுக்கு 2020ல் தடை விதித்ததையும் எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

    2020ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    அதில், " பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கட், எண்ணெய், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை" என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், "அன்றாட உணவுப் பொருட்களை அடைக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களை தடை செய்யும் அரசாணையை முழுமையாக அமல்படுத்துவது சாத்தியமில்லாததால், அதை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக" அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    • முதல் ஆளாக வந்து சாப்பிடுகிறாயே என்று விஜயகாந்தை சாப்பிட விடாமல் எழுப்பிவிட்டார்.
    • விஜயகாந்துக்கு நிகர் விஜயகாந்த் தான் என்று திரையுலகமே அவரை பாராட்டி மகிழ்ந்தது.

    'இனிக்கும் இளமை' படத்தில் அறிமுகமான விஜயகாந்த், மதிய உணவு இடைவேளையில் அனைவரும் சாப்பிட உட்காரும்போது தானும் சாப்பிடுவதற்காக மேஜையில் அமர்ந்தார். அப்போது படக் குழுவை சேர்ந்த ஒருவர், படத்தின் ஹீரோவே இன்னும் சாப்பிடவில்லை. அதற்குள் முதல் ஆளாக வந்து சாப்பிடுகிறாயே என்று விஜயகாந்தை சாப்பிட விடாமல் எழுப்பிவிட்டார். அரிசி ஆலை வைத்திருந்த விஜயகாந்துக்கு அன்று உணவுக்கு ஏற்பட்ட நிலைமை அவரை மிகவும் பாதித்தது. அன்றிலிருந்து சினிமா துறையில் நாம் உயரத்தை எட்டியதும் அனைவருக்கும் விருந்தோம்பல் செய்வதை முதல் கடமையாக செய்ய வேண்டும் என்று அவருக்குள் சபதம் எடுத்துக் கொண்டார்.

    அதன்படி சினிமா துறையில் அவர் சாதித்ததும் சாப்பாடு விஷயத்தில் அனைவருக்கும் உணவு கொடுப்பதில் மிகவும் முன்னுரிமை கொடுத்து வந்தார். படப்பிடிப்பில் சினிமா தொழிலாளர்களுக்கு 3 வேளை உணவு கொடுப்பதை விஜயகாந்த் தான் முதலில் அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு தான் மற்றவர்களும் 3 வேளை உணவு கொடுக்க தொடங்கினார்கள். இந்த விஷயத்தில் விஜயகாந்துக்கு நிகர் விஜயகாந்த் தான் என்று திரையுலகமே அவரை பாராட்டி மகிழ்ந்தது.

    • உணவு வழங்கிய பின்பு அதற்குரிய இடத்தி்ல் தானாக வந்து நின்றுவிடும்.
    • கேமரா மற்றும் சென்சார் மூலம் குறிப்பிட்ட டேபிளுக்கு சென்று ரோபோ உணவு வழங்கும்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம், அவிநாசி - திருப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சொகுசு உணவகத்தில் உணவு விநியோகிக்கும் பணியில் முதன்முறையாக ரோபோ பயன்படுத்தப்படுகிறது. இது குழந்தைகள், பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சப்ளையர்கள் ஆர்டர் எடுத்து சமையல்காரர்களிடம் வழங்கி விடுகின்றனர்.

    உணவு தயாரானதும் ரோபோவில் உணவு வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அலமாரியில் அந்த உணவு வைக்கப்படுகிறது. பின்னர் உணவு ஆர்டர் செய்த வாடிக்கையாளரின் டேபிளுக்கு செல்லும் வகையில் ஒவ்வொரு டேபிளுக்கான எண் ரோபோவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஆர்டர் செய்த வாடிக்கையாளர்கள் அமர்ந்திருக்கும் டேபிள் எண்ணை அழுத்தியதும் அங்கு ரோபோ உணவுகளை எடுத்து செல்கிறது.

    பின்னர் ஆர்டர் செய்த உணவை ரோபோவின் அலமாரியில் இருந்து அங்கு இருக்கும் சப்ளையர் அல்லது வாடிக்கையாளர்களே உணவுகளை எடுத்து கொள்ளலாம். உணவு வழங்கிய பின்பு அதற்குரிய இடத்தி்ல் தானாக வந்து நின்றுவிடும்.

    ரோபோ சப்ளை குறித்து உணவகத்தின் மேற்பார்வையாளர் ஒருவர் கூறுகையில்,

    சமையலறையில் இருந்து வாடிக்கையாளர்கள் இருக்கும் இடம் வரை உணவு எடுத்து செல்ல ரோபோ பயன்படுத்த படுகிறது. இதற்காக ரோபோவில் அதற்கு உண்டான ப்ரோக்ராம் சார்ட் மற்றும் எண்கள் கண்டறியும் சேவை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மற்றும் சென்சார் மூலம் குறிப்பிட்ட டேபிளுக்கு சென்று ரோபோ உணவு வழங்கும். தொடர்ந்து அடுத்த டேபிளுக்கு சென்று விடும். மேலும் பிறந்தநாள், திருமணநாள் போன்ற விசேஷங்கள் சமயத்தில், சம்பந்தப்பட்டவர்கள் எதிர்பாராத வகையில் ரோபோ வாயிலாக கேக்கை அனுப்பி வைத்து அவர்கள் ஆச்சரியப்படும் வகையில் ஹேப்பி பர்த்டே என்று பாடும் வகையில் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் குறைந்த நேரத்தில் அதிகளவில் உணவு சப்ளை செய்யப்படுகிறது. இந்த ரோபோவை காண்பதற்காகவே உணவகத்தை தேடி வாடிக்கையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக அளவில் வருவதாகவும், குழந்தைகள் இந்த ரோபோவை கண்டு அதிக அளவில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.

    • மும்பையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் இந்த ஆண்டு ரூ.42.3 லட்சத்துக்கு உணவுகளை ஆர்டர் செய்து முதலிடத்தில் உள்ளார்.
    • சைவ உணவுகளில் நவராத்திரியின் போது 9 நாட்களிலும் மசாலா தோசையே முதலிடத்தை தட்டிச்சென்றது.

    சென்னை:

    இந்தியா முழுவதும் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் உணவுகளில் முதலிடத்தை பிடிக்கும் உணவு எது என்பதை பிரபல தனியார் உணவு டெலிவரி நிறுவனம் வருடந்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி தொடர்ந்து 8-வது ஆண்டாக வீடுகளுக்கு டெலிவரி செய்யும் உணவுகளில் தொடர்ந்து பிரியாணி முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறது.

    இதுகுறித்து தனியார் உணவு டெலிவரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்த ஆண்டு வீடு தேடி வரும் உணவுகளில் பிரியாணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 8-வது ஆண்டாக பிரியாணியே தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இந்த ஆண்டில் ஒரு வினாடிக்கு 2.5 பிரியாணி ஆர்டர்கள் பெறப்பட்டு உள்ளன. ஒவ்வொரு 5.5 சிக்கன் பிரியாணிக்கும் ஒரு வெஜ் பிரியாணி வீதம் ஆர்டர் பெறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி மட்டும் 4.30 லட்சம் பிரியாணிகள் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்பட்டன.

    மேலும் 6 பிரியாணிகளில் ஒரு பிரியாணி ஐதராபாத்தில் இருந்து ஆர்டர் பெறப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஐதராபாத் மக்களின் பிரியாணி மீதான மோகம் குறையவில்லை என்பது தெரிகிறது.

    உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற கடந்த நவம்பர் 19-ந்தேதி நிமிடத்துக்கு 188 பீட்சாக்கள் ஆர்டர் பெறப்பட்டு உள்ளன. அதிகபட்ச பீட்சா ஆர்டர்கள் சென்னை, புதுடெல்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து பெறப்பட்டு உள்ளன.

    மும்பையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் இந்த ஆண்டு ரூ.42.3 லட்சத்துக்கு உணவுகளை ஆர்டர் செய்து முதலிடத்தில் உள்ளார்.

    துர்கா பூஜையின் போது இதுவரை முதலிடத்தில் இருந்த ரசகுல்லாவை குலோப் ஜாமூன் முந்தியது. அன்று மட்டும் 77 லட்சத்துக்கும் அதிகமான குலோப் ஜாமூன்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன.

    சைவ உணவுகளில் நவராத்திரியின் போது 9 நாட்களிலும் மசாலா தோசையே முதலிடத்தை தட்டிச்சென்றது.

    பெங்களூரில் அதிக அளவில் கேக்குகள் ஆர்டர் பெறப்பட்டுள்ளன. சாக்லெட் கேக் மட்டும் 85 லட்சம் ஆர்டர் பெறப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. டெலிவரி நிறுவன ஊழியர்கள் உணவு டெலிவரிக்காக இந்த ஆண்டில் மட்டும் ஒட்டு மொத்தமாக 16.64 கோடி கி.மீ. தூரம் பயணித்துள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • அங்கு பட்டம் முடித்தவர்களுக்கு லட்சக்கணக்கில் ஊதியம் கிடைத்து வந்தது
    • 14 மணி நேரம் வேலை செய்தாலும் போதிய வருவாய் ஈட்ட வழியின்றி தவிக்கின்றனர்

    அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களை சேர்ந்த கல்லூரிகளில் பட்டம் படித்தவர்களுக்கு உலகின் பல முன்னணி நிறுவனங்களில் லட்சக்கணக்கில் சம்பளம் தரும் வேலைவாய்ப்புகள் கிடைத்து வந்ததனால் அதிக பொருட்செலவையும் பொருட்படுத்தாமல் கல்வி பயில பல இந்திய மாணவ மாணவியர்கள் ஆண்டுதோறும் அங்கு செல்வது வழக்கம்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலிருந்து மட்டும் ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் மாணவ மாணவியர்கள் கனடாவில் படித்து பட்டம் பெற்று, அங்கேயே வேலை வாய்ப்புகளை பெற செல்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் "ஸ்டெம்" (STEM) எனப்படும் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளிலும், வணிக நிர்வாக மேலாண்மை (MBA) துறையிலும் பட்டம் பெற அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சேர்பவர்கள்.

    இந்நிலையில், கனடாவின் தேசிய புள்ளிவிவர மையம் (National Statistical Agency) மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி கடந்த ஜனவரி மாதத்திலிருந்தே கனடாவில் வேலை வாய்ப்பு 61.8 சதவீதம் எனும் அளவிற்கு குறைந்துள்ளதாக தெரிகிறது. மேலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு மிக அதிகம் பேர் வேலை இழந்துள்ளனர்.

    இதன் காரணமாக அங்கு படிக்க சென்ற மாணவர்கள், "ஆட் ஜாப்ஸ்" (odd-jobs) எனப்படும் அதிக திறன் தேவைப்படாத, அதிக ஊதியம் வழங்காத சாதாரண வேலைகளை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    தற்போது பட்டம் முடித்த பல இந்திய மாணவர்களுக்கு கனடாவில் உணவகங்கள், மின்னணு சாதன விற்பனை நிலையங்கள், மொபைல் விற்பனை கடைகள், அங்காடிகள் உள்ளிட்ட இடங்களில் குறைந்த வருமானத்தில் வேலை பார்த்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலர் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை வேலை செய்தாலும் வாடகை, உணவு மற்றும் இதர செலவுகளுக்கு போதுமான வருவாய் ஈட்ட முடியாமல் தவிக்கின்றனர்.

    கடும் குளிர் பிரதேச நாடான கனடாவில் வேலைவாய்ப்புகள் குறைவதாலும், பட்டம் பெற பெரும் பணம் செலவழித்து வந்து விட்டதாலும், நாடு முழுவதுமே வேலைவாய்ப்புகள் குறைவதாலும் அவர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    • உணவை சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
    • அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    கோவை:

    கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜாஸ்மின். இவரது வீட்டில் கியாஸ் சிலிண்டர் காலியானது.

    இதனையடுத்து ஜாஸ்மின் ஆன்லைன் மூலம் பிரபல உணவகத்தில் நேற்று பிற்பகலில் தயிர்சாதம், சாம்பார் சாதம், பேபி கார்ன் ஆகியவற்றை ஆர்டர் செய்தார்.

    பின்னர் உணவு வந்து சேர்ந்தது. அவருக்கு வந்த உணவை அவரும் அவரது குழந்தையும் சாப்பிட தொடங்கினர். திடீரென உணவில் டீ தூள் போன்று பொட்டலம் ஒன்று ஸ்பூனில் தட்டுப்பட்டது.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜாஸ்மின் அதனை எடுத்துப் பார்த்தார். அப்போது அது கூல் லீப் எனப்படும் புகையிலை என்பது தெரியவந்தது.

    இதனை பார்த்து ஜாஸ்மின் அதிர்ச்சியடைந்தார். உணவை சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடடினயாக அவர் 108 ஆம்புலன்சு ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக அவர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று குழந்தையை பரிசோதனை செய்தனர். அப்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருந்தது.

    உணவில் புகையிலை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு 10 முறைக்கும் மேல் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.

    ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இது போன்று அலட்சியமாக உணவு விநியோகம் செய்யும் உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த தகவல் வெளியானதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கோவிந்தராஜன் தலைமையிலான அதிகாரிகள் புகையிலை கலந்த உணவை கொடுத்த உணவகத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது கடையில் சுகாதாரமற்ற முறையில் பணியாற்றிய ஊழியர்களிடம் பாதுகாப்பு உபகரணங்களை முறையாக அணியுமாறும், கடையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உரிமையாளருக்கு அறிவுரை வழங்கினர்.

    மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து வினியோகிக்கப்பட்ட உணவில் புகையிலை எப்படி வந்தது என்பது குறித்தும் விசாரித்தனர்.

    மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதுதவிர கடையின் உரிமையாளருக்கு இது தொடர்பாக விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறையினர் கூறும்போது, சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டோம். உணவில் புகையிலை எப்படி வந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இது தொடர்பாக நோட்டீசும் அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டல் நிர்வாகத்தின் விளக்கத்திற்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

    • மழை வேண்டி பாறை மீது சோறிட்டு பக்தர்கள் உணவருந்தும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி நடந்து வருகிறது.
    • வடப்புளி பெருமாள், ஆஞ்சநேயர் கோவில் மற்றும் கிராம தெய்வங்களை வழிபட்டு ராமச்சந்திர மூர்த்தி கோவிலை வந்தடைந்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கொப்பையாசாமி மலை உச்சியில் பிரசித்தி பெற்ற கொப்புக்கொண்ட பெருமாள்சாமி கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் மழை வேண்டி பாறை மீது சோறிட்டு பக்தர்கள் உணவருந்தும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டும் பி.தொட்டியபட்டியிலுள்ள ராமச்சந்திர மூர்த்தி கோவிலிலிருந்து கடந்த இருதினங்களாக அங்குள்ள முக்கிய வீதிகளில் மருளாளி ஆடிவர பொதுமக்கள் சாமிக்கு காணிக்கையாக அரிசி, தானிய வகைகளை வழங்கினர். அவை அனைத்தையும் வாங்கி சேமித்து நேற்று முன்தினம் இரவு கொப்பையா சாமி மலை உச்சியிலுள்ள கொப்புக்கொண்ட பெருமாள் கோவிலில் பக்தர்கள் அனைவரும் தங்கி வழிபட்டனர்.

    இந்த வழிபாடு நேற்று காலை தொடங்கி சாமிக்கு 11 விதமான பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு கொப்புக் கொண்ட பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். காணிக்கையாக வாங்கி சேமித்து வைத்த அரிசி தானியங்களைக் கொண்டு மழை வேண்டி சாமிக்கு பொங்கல் மற்றும் சோறு படையிலிட்டு மருளாளி ஆடி வந்தார்.

    அப்போது பக்தர்கள் மழை வேண்டியும், தம்பதிகள் குழந்தை வரம் வேண்டி யும் மருளாளியிடம் வரமாக கேட்டு பிரசாதம் பெற்றனர். சாமிக்கு படையிலிட்ட சோற்றை கோவிலை சுற்றியுள்ள பாறைகளில் பக்தர் கள் அமர்ந்து பாறையில் சோறிட்டு உணவருந்தி வழிபட்டனர்.

    அவ்வாறு உணவருந்திய பின்பு பாறையில் கிடக்கும் எச்சத்தை சாமி வருணபகவானை வரவழைத்து மழை பெய்யச் செய்து அதனை சுத்தம் செய்யும் என்பது அப்பகுதி பொதுமக்களின் பராம்பரிய ஐதீகமாக இருந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பாறையில் உணவருந்திய பின்பு மருளாளியுடன் மீண்டும் மலையிலிருந்து கீழறங்கி ஊர்வலமாக பி.தொட்டிய பட்டி கண்மாய் பகுதியிலுள்ள வடப்புளி பெருமாள், ஆஞ்சநேயர் கோவில் மற் றும் கிராம தெய்வங்களை வழிபட்டு ராமச்சந்திர மூர்த்தி கோவிலை வந்தடைந்தனர்.

    இந்த திருவிழா இப்பகுதியிலுள்ள பக்தர்கள் பலரும் பெருமிதமாக கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று மழை வேண்டுதலால் விவசாயங்கள் செழிக்கும் என்று கூறுகின்றனர். மேலும் அந்த பகுதியில் பக்தர்கள் தங்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு கொப்பையா என பெயர் சூட்டி சாமிக்கு நன்றி கடன் செலுத்துகின்றனர்.

    • நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உணவுப்பழக்கம் மாறுபடுகிறது.
    • இனிப்பு வகைகளை ருசிப்பதற்குத்தான் பலரும் விரும்புவார்கள்.

    நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உணவுப்பழக்கம் மாறுபடுகிறது. காரசாரமான உணவுகளை விட நாவிற்கு தித்திப்பூட்டும் இனிப்பு வகைகளை ருசிப்பதற்குத்தான் பலரும் விரும்புவார்கள். தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் நாட்டின் மற்ற பகுதியில் வசிப்பவர்களும் சுவைக்க தூண்டும் அளவிற்கு ருசி மிகுந்தவை. அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு...

    கொழுக்கட்டை:

    அரிசி மாவு, வெல்லம், தேங்காய் கலந்து நீராவில் வேகவைக்கப்படும் இது அனைத்து தரப்பினரும் விரும்பும் இனிப்பு பலகாரமாக உள்ளது. கொழுக்கட்டையில் பல வகைகள் இருக்கின்றன. இனிப்பு மட்டுமின்றி காரமாகவும் இதனை தயார் செய்து ருசிக்கலாம்.

    மைசூர் பாக்:

    கர்நாடக மாநிலம் மைசூருவில் தயாராகும் இது அதன் பெயரையும் தாங்கி நிற்கிறது. உளுந்தம் பருப்பு, நெய், சர்க்கரை போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் இது நாவில் பட்டவுடன் கரைந்துவிடும் தன்மையுடையது. கர்நாடகா மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் இந்தியர்கள் அறிந்திருக்கும் இனிப்பு வகைகளுள் ஒன்றாக விளங்குகிறது. அரசர் காலத்தில் இருந்தே அதன் தரம், ருசி மாறாமல் இன்றளவும் சுவைக்கப்படுகிறது.

    உன்னியப்பம்:

    கேரளாவில் பிரபலமான இனிப்பு வகையாக விளங்குகிறது. அரிசி மாவு, வாழைப்பழம், வெல்லம், வறுத்த எள், தேங்காய் துண்டுகள், ஏலக்காய் பொடி போன்றவை கொண்டு தயாரிக்கப்படும் இது ஒவ்வொரு வீடுகளிலும் ருசிக்கப்படும் சிற்றுண்டியாக விளங்குகிறது. மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு பரிமாறப்படும் இனிப்பு வகையாக கருதப்படுகிறது.

    ஒப்பாட்டு:

    கர்நாடகாவில் தயாரிக்கப்படும் இது பூரான் போளி என்றும் அழைக்கப்படுகிறது. கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய் துருவல் போன்றவற்றின் கலவையில் இது உருவாகிறது. போளி வகையிலேயே மாறுபட்ட சுவை கொண்டது. இதனை இனிப்பு பிரெட் என்றும் அழைப்பார்கள். பெரும்பாலும் திரு விழாக்கள், வீட்டு விசேஷங்கள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகளின்போது இது பரிமாறப்படுகிறது.

    ஜாங்கிரி:

    உளுந்தம் பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்பு வகை இது. அதனை நன்றாக வறுத்து பொடித்து சர்க்கரை பாகில் ஊறவைத்து தயாரிக்கப்படுகிறது. மெல்லிய இழைகளாக அச்சுக்களில் வார்க்கப்படும் இது ஆரஞ்சு நிற சாயலில் காட்சி அளிக்கும். தித்திக்கும் இனிப்பு பண்டங்களை விரும்புபவர்கள் ஜாங்கிரியை தவிர்க்கமாட்டார்கள்.

    கடலை மிட்டாய்:

    தமிழ்நாட்டின் பிரபலமான தின்பண்டமாக விளங்கும் கடலை மிட்டாய், வறுத்த வேர்க் கடலை, வெல்லம் சேர்த்து செய்யப்படுகிறது. மொறுமொறுப்பான, மிதமான இனிப்பு சுவை கொண்டது.

    கேசரி:

    ரவை, நெய், சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்து தயாரிக்கப்படும் இந்த இனிப்பு வகையை குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பினரும் ருசிப்பார்கள்.

    பூதரெகுலு:

    ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இது, அரிசி மாவு, நெய் மற்றும் சர்க்கரை கலந்து தயாரிக்கப்படுகிறது. காகித இழை போல் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். அதில் உலர் பழங்களும் சேர்க்கப்படும். உலர் பழங்கள் சேர்க்கப்படுவதால் இது சத்தான இனிப்பு பொருளாக அறியப்படுகிறது.

    • புதிய வகையான உணவு பழக்கத்தால் மனிதன் பாதிக்கப்படுகிறான்
    • நல்ல உடல் ஆரோக்கியத்துடன் 120 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தனர்.

     வேலாயுதம்பாளையம், 

    பழைய காலத்து உணவு வகைகளால் மனிதர்களின் ஆரோக்கியமான உடல்நிலையும், தற்போதைய உணவு பழக்க வழக்கங்களால் மனிதர்களின் உடல்நிலை சீர்கெட்டு போனது குறித்தும் மூதாட்டியின் கருத்து:-

    கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு காலை உணவாக கேழ்வரகு களி,கம்மஞ்சோறு,சோளச்சோறு போன்றவற்றையே பயன்படுத்தி வந்தோம். மதிய உணவாகவும் அதையே பயன்படுத்தினோம். இரவு உணவாக மட்டும் அரிசி சோற்றை சாப்பிட்டு வந்தோம். வேறு எந்த உணவுகளையும் அவர்கள் பயன்படுத்தவில்லை. காலங்காலமாக இந்த உணவுகளை பயன்படுத்தி வந்ததன் காரணமாக நல்ல உடல் ஆரோக்கியத்துடன் 120 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தனர்.

    அவர்களுக்கு எந்த நோய், நொடியும் இல்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வந்தனர். 20 ஆண்டுகளுக்கு முன் முதல் நவநாகரீகம் பெருகி பல்வேறு நவீன வெளிநாட்டு உணவு பழக்கத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தற்காலங்களில் இளைஞர்கள் புதிய புதிய உணவு வகைகளை தேடி சென்று சாப்பிட்டு வருகின்றனர். இதன் காரணமாக உடல் நலன்கள் பாதிக்கப்பட்டு ஆரோக்கியமும் இல்லாமல் குறைந்த வயதிலேயே மனிதன் இறக்கக்கூடிய நிலைக்கு சென்று விடுகிறான். பாஸ்ட் புட் உணவையும், சவர்மா, பர்கர் போன்ற பல்வேறு புதிய வகையான உணவுகளை இப்போதைய இளைஞர்கள் தேடிச் செல்கின்றனர். வேகவைத்த, எண்ணெயில் பொரித்த சிக்கன் வகைகளையும் , மட்டன் வகைகளையும் குளிர்சாதன பெட்டிக்குள் வைத்திருந்து விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் ஆடு, கோழி கறிகளை வெட்டி குளிர்சாதனம் பெட்டிக்குள் வைத்து அதை அவ்வப்போது எடுத்து உணவுகளாக தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இதன் காரணமாக மனிதனின் உடலுக்கு கேடு விளைவிக்கிறது. இதன் காரணமாகவே நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் இறந்தார். 48-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர். அதேபோல் அதே நாமக்கல் பகுதியில் பர்கர் சாப்பிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர். அந்த காலத்து உணவு முறைகளை பயன்படுத்தி வந்திருந்தால் இது போன்ற நிலைமைகள் ஏற்படாது. எனவே அந்தக் காலத்து உணவு பழக்க வழக்கத்திற்கும் இந்த காலத்து உணவு பழக்க வழக்கத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. ஒவ்வொரு நாளும் வேக வைத்த எண்ணெய்யிலேயே மீண்டும் உணவு பொருட்களை தயாரிக்கின்றனர். இதனால் உடல்நலம் பாதிக்கிறது. எனவே நாம் பழைய உணவு பழக்கத்திற்கு சென்று அந்த காலத்து உணவு பழக்கவழக்கங்களை நாம் பயன்படுத்தி வந்தால் உடல் நலத்தை பேணிக் காக்க முடியும். நமது உடலை பாதுகாப்போம் என்றார்.

    ×