உள்ளூர் செய்திகள்

திருட்டு நடந்த வீட்டில் மோப்ப நாய் சோதனை நடந்தது.

வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருட்டு

Published On 2023-02-21 08:36 GMT   |   Update On 2023-02-21 08:36 GMT
  • பீரோ உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பாபநாசம்:

பாபநாசம் மேல ரஸ்தா மெயின் ரோட்டில் வசித்து வரும் மணிகண்டன் (வயது 34), வெளிநாடு சென்று வந்தவர், இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வங்காரம்பேட்டையில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்று இருந்தார்.

பின்னர் அவர் வீட்டிற்கு வந்த பொழுது பின் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த சுமார் 9 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து மணிகண்டன் பாபநாசம் போலீசில் புகார் அளித்தார்.

உடன் சம்பவ இடத்திற்கு பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும் தஞ்சையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டது. கைரேகை நிபுணர் கார்த்திக் கைரேகைகளை கைப்பற்றி சோதனையில் ஈடுபட்டார்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News