உள்ளூர் செய்திகள்

ரத்ததான முகாம் நடைபெற்ற காட்சி. 

கயத்தாறு சுங்கச்சாவடியில் ரத்ததான முகாம்

Published On 2022-06-10 10:36 GMT   |   Update On 2022-06-10 10:36 GMT
  • கயத்தாறு சுங்கசாவடி, கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து ரத்த தான முகாம் நடத்தியது.
  • முகாமில் 30-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி பணியில் இருக்கும் இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர்.

கயத்தாறு:

கயத்தாறு சுங்கச்சாவடியில் கோவில்பட்டி அரசு மருத்துவமனை ரத்த வங்கியும், கயத்தாறு சுங்கசாவடி, கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து ரத்த தான முகாம் நடத்தியது.

கோவில்பட்டி அரசு ரத்த வங்கியின் குழு தலைவர் டாக்டர் லட்சுமிசித்ரா தலைமை தாங்கினார்.

இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி பணியில் இருக்கும் இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர்.

கயத்தாறு வட்டார மருத்துவர் ராஜ்குமார், நலக்கல்வியாளர் முத்துசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கணேசன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் விஜயகுமார், பெரியசாமி, சுங்கச்சாவடி மதுரை மேலாளர் அம்படிஸ்ரீனிவாசகிரன்குமார்,

கயத்தாறு சுங்கச்சாவடி பல்வேறு துறை மேலாளர்கள் விஜய், ஆனந்தராஜ், சிவகுமார், ஜெபராஜ், வம்சி, ரமாசங்கர், பிரசாத் மற்றும் சுகாதார அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News