உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

சாணார்பட்டி அருகே சாலை பணியால் தொடர் விபத்துகள்

Published On 2022-07-21 07:47 GMT   |   Update On 2022-07-21 07:47 GMT
  • திண்டுக்கல்லில் இருந்து நத்தம், காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
  • அஞ்சுகுழிபட்டி அருகே விபத்தை கட்டுப்படுத்தும் வகையில் பேரிக்கார்டு அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல்லில் இருந்து நத்தம், காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் திண்டுக்கல் நத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. இந்த பணியின் போது மேட்டுக்கடை அஞ்சுகுழிட்டி பிரிவு அருகே ரோடு சீரமைக்கப்பட்டது.இதனால் அஞ்சுகுழிபட்டி ரோடு மேடாக உள்ளது.

இந்த நிலையில் அஞ்சுகுழிபட்டி, எல்லப்பட்டி சோழகுளத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து வரக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு மெயின் ரோட்டில் வரும் வாகனங்கள் சரிவர தெரிவதில்லை.

இதனால் அஞ்சுகுழிபட்டி பிரிவு அருகே அடிக்கடி வாகன விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று அஞ்சுகுழிட்டியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் கார் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அஞ்சுகுழிபட்டி அருகே விபத்தை கட்டுப்படுத்தும் வகையில் பேரிக்கார்டு போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News