இளம்ெபண்ணுக்கு அடி உதைதம்பதி மீது வழக்கு
- குடும்ப பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.
- சம்பத்தன்று ஞானமூர்த்தியும் அவரது மனைவி தமிழ்ச்செல்வியும் கல்பனாவை பிடித்து தாக்கியுள்ளனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணியனூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 32). இவரது மனைவி கல்பனா (27). அதே பகுதியை சேர்ந்த வடிவேலின் அண்ணன் ஞானமூர்த்தி ( 35). இவரது மனைவி தமிழ்ச்செல்வி ( 32).
இவர்களுக்குள் குடும்ப பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. சம்பத்தன்று ஞானமூர்த்தியும் அவரது மனைவி தமிழ்ச்செல்வியும் கல்பனாவை பிடித்து தாக்கியுள்ளனர். அப்போது கல்பனா மயக்கம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தனர். அதன் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராசப்பன் விசாரணை நடத்தி ஞானமூர்த்தி மற்றும் அவரது மனைவி தமிழ்ச்செல்வி மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.