உள்ளூர் செய்திகள்

வீட்டில் பதுக்கிய 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்- 3 பேர் கைது

Published On 2022-07-08 09:13 GMT   |   Update On 2022-07-08 09:13 GMT
  • பணகுடியில் சிலர் வீட்டில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • பணகுடியில் போலீசார் சோதனை நடத்தினர்.

நெல்லை:

பணகுடியில் சிலர் வீட்டில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது திசையன்விளை கொம்பிக்கோட்டையை சேர்ந்த ஜெல்டன் (வயது35), மூலைக்கரைப்பட்டி தென்னவநேரியை சேர்ந்த முத்துச்செல்வன் (25), காடன்குளத்தை சேர்ந்த செல்லத்துரை (27) ஆகியோர் வீட்டில் 400 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதனை பறிமுதல் செய்த போலீசார் ஜெல்டன், முத்துசெல்வன், செல்லத்துரை ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News