வானூர் அருகே கஞ்சா கடத்திய 4 வாலிபர்கள் கைது
- வானூர் அருகே கஞ்சா கடத்திய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடமிருந்து 40 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் கஞ்சா, புகயிலைப் பொருட்கள் மற்றும் மது கடத்தல் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட செயல்கள் தற்போது அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிளியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையி லான போலீசார் நேற்று புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் செல்லும் 4 வழிச்சாலையில் கொண்டா மூர் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடு பட்டனர்.
அப்போது அந்த வழி யாக 4 பேர் 2 மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த னர். உடனே போலீசார் அவர்களை நிறுத்தி சோதனை செய்த னர். அந்த சோதனையில் அவர்களிடமிருந்து 40 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை கடத்தி வந்த அதே பகுதி யை சேர்ந்த தினேஷ் (வயது 24), ரூபன் ராஜ் (23), வாஞ்சிநாதன் (25) உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.