சரவணம்பட்டி அருகே ஆசிரியர் வீட்டில் 4 பவுன் நகை கொள்ளை
- வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் காமிராவை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் வடிவேலு (வயது 46). இவர் தனியார் கார்ப்பரேட் வங்கியில் மானேஜராக உள்ளார். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று காலையில் வடிவேலு மற்றும் அவரது மனைவி 2 பேரும் வழக்கம்போல வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர். மாலை அவரது மனைவி பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்க ப்பட்டிப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடை ந்தார். அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து அதில் இருந்த 4 பவுன் நகை மற்றும் காமிராவை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வடிவேலு சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப் பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.