உள்ளூர் செய்திகள்
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியானார்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடியை சேர்ந்தவர் விருமாண்டி. அரசுபோக்குவரத்துக்கழக டிரைவர். இவரது மகன் காசிநாதன் (19). உசிலம்பட்டி முத்துராமலிங்கதேவர் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறை நாட்களில் காசிநாதன் மைக்செட் போடுவது வழக்கம்.
சாத்தங்குடி கிராமத்தில் புதுமனைபுகுவிழாவிற்கு மைக்செட் மற்றும் சீரியல் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். எதிர்பாராவிதமாக மின்சாரம் தாக்கி காசிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.