உள்ளூர் செய்திகள்
ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள்.

பேட்டை அருகே மாணவர்களுக்கு கோடைகால பயிற்சிகள்

Published On 2022-05-29 09:32 GMT   |   Update On 2022-05-29 09:32 GMT
பேட்டை அருகே உள்ள கோடீஸ்வரன்நனர் பகுதியில் மாணவர்களுக்கு கோடைகால பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.
நெல்லை:

மாணவர்களுக்கு தற்போது கோடைகால விடுமுறை அளிக்கபட்டுள்ளது. இதையடுத்து விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் மாணவர்களுக்கு பல்வேறு இடங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
 
அந்தவகையில் நெல்லை பேட்டை அருகே உள்ள கோடீஸ்வரன்நகர் பகுதியில் கடந்த 13-ந் தேதி முதல் கோடைகால பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் மாணவர்களுக்கு யோகா, ஸ்கேட்டிங் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி நாளை மறுநாளுடன் (31-ந் தேதி) முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை அமல்தாமஸ் செய்து வருகிறார்.

மாணவர்களுக்கு கோடைகால பயிற்சிகளை அழகேசராஜா வழங்கி வருகிறார். 85 மாணவர்கள் ஸ்கேட்டிங் பயிற்சியும், 200 மாணவர்கள் யோகா பயிற்சியும் பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News