உள்ளூர் செய்திகள்
நெல்லையில் கப்பல் ஊழியர் வீட்டில் நகை திருட்டு
நெல்லையில் கப்பல் ஊழியர் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு நகை திருட்டு போனது.
நெல்லை:
பாளை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள மிஸ்பா நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் குரு பிரசாந்த் (வயது 34). இவர் கப்பலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். 6 மாதங்களுக்கு ஒருமுறை விடுமுறையில் நெல்லைக்கு வருவது வழக்கம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை வந்த குரு பிரசாந்த் தனது சகோதரி வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார்.
நேற்று கே.டி.சி. நகரில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டுக்கு குரு பிரசாந்த் சென்றபோது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் இருந்த 2 பவுன் தங்க நகை, செல்போன் மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,500 உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.
இது தொடர்பாக அவர் பாளை தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.
பாளை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள மிஸ்பா நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் குரு பிரசாந்த் (வயது 34). இவர் கப்பலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். 6 மாதங்களுக்கு ஒருமுறை விடுமுறையில் நெல்லைக்கு வருவது வழக்கம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை வந்த குரு பிரசாந்த் தனது சகோதரி வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார்.
நேற்று கே.டி.சி. நகரில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டுக்கு குரு பிரசாந்த் சென்றபோது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் இருந்த 2 பவுன் தங்க நகை, செல்போன் மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,500 உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.
இது தொடர்பாக அவர் பாளை தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.