உள்ளூர் செய்திகள்
நாட்டறம்பள்ளி அருகே மர்ம விலங்கு கடித்ததில் 8 ஆடுகள் இறந்து கிடந்த காட்சி.

நாட்டறம்பள்ளி அருகே மர்ம விலங்கு கடித்து 8 ஆடுகள் சாவு

Published On 2022-05-26 10:51 GMT   |   Update On 2022-05-26 10:51 GMT
நாட்டறம்பள்ளி அருகே மர்ம விலங்கு கடித்து 8 ஆடுகள் பரிதாபமாக இறந்தது.
ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி கிராமம் காய்காரன் வட்டத்தை சேர்ந்தவர் திருப்பதி இவரது மனைவி அலமேலு சொந்தமான 9 ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இவர் வழக்கும் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு அருகே உள்ள ஆடு கட்டும் தொழுவத்தில் கட்டி வைத்து இரவில் தூங்க சென்றார்.

அதன் பிறகு இன்று காலை தனது ஆடு கட்டிவைக்கப்பட்ட தொழுவத்தில் ஆடுகளை பார்க்க சென்றார்.

அப்போது அடையாளம் தெரியாத விலங்கு கடித்ததில் 8 ஆடுகள் இறந்து கிடந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். 

ஆடு மர்மமான முறையில் இறந்துள்ளது குறித்து கால்நடை துறை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News