உள்ளூர் செய்திகள்
ஓசூரில் பா.ம.க. சார்பில் ஜெ.குரு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

ஓசூரில் பா.ம.க. சார்பில் ஜெ.குரு நினைவுநாள் அனுசரிப்பு

Published On 2022-05-26 10:38 GMT   |   Update On 2022-05-26 10:38 GMT
ஓசூரில் பா.ம.க. சார்பில் ஜெ.குரு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
ஓசூர், 

ஓசூரில் பா.ம.க.சார்பில், மறைந்த வன்னியர் சங்க தலைவர் ஜெ.குருவின் 4-ஆம் ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஓசூர் சீதாராம்நகர், தர்கா, ரெயில்நிலையம் முன்பு, ரிங்ரோடு.உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில்.குருவின் படத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளர் அருண்ராஜன் தலைமையில் பூஜைகள் செய்து, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

மேலும் இதில், முன்னாள் மாவட்ட தலைவர் முனிராஜ், பா.ம.க.வழக்கறிஞர் சமூகநீதி பேரவையின் தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்ப பிரிவின் மாநில தலைவர் கனல் கதிரவன், மாவட்ட அமைப்பு செயலாளர் விசுவநாதன், மாநகர சிறுபான்மை பிரிவு செயலாளர் சிராஜ் மற்றும் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News