திருப்பூர்:
திருப்பூர் பழவஞ்சிப்பாளையம் துணைமின் நிலையத்தில் சந்திராபுரம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இந்த துணைமின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி அன்று மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்தின் சந்திராபுரம் மின் பாதைக்கு உள்பட்ட பகுதிகளான சந்திராபுரம் பிரிவு, சாஸ்திரி நகர், இந்திரா நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இதுபோல் திருப்பூர் கோட்டம் கலெக்டர் அலுவலக துணை மின் நிலையத்தில் பாரதிநகர் உயர் மின்பாதையில் அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் பாரதி நகர் பீடரில் நாளை 24-ந் தேதி மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை இந்திரா நகர், பல்லடம் ரோடு, வித்யாலயம், பாரதி நகர், குளத்துப்பாளையம், செல்வலட்சுமி நகர், திருப்புரான் தோட்டம் ஆகிய பகுதி–ளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.