உள்ளூர் செய்திகள்
பாளையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி
பாளையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டை சேர்ந்தவர் முருகன் (வயது35).
இவர் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு வந்து விட்டு தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அரியகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக முருகனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட முருகன் தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்தி லேயே துடிதுடித்து இறந்தார்.
தகவல் அறிந்த பாளை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடியை சேர்ந்த கார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டை சேர்ந்தவர் முருகன் (வயது35).
இவர் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு வந்து விட்டு தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அரியகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக முருகனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட முருகன் தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்தி லேயே துடிதுடித்து இறந்தார்.
தகவல் அறிந்த பாளை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடியை சேர்ந்த கார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.