உள்ளூர் செய்திகள்
மிரட்டல்

பெண்ணுக்கு கொலை மிரட்டல்

Published On 2022-05-19 10:24 GMT   |   Update On 2022-05-19 10:24 GMT
மதுரையில் வழக்கை வாபஸ் பெறக்கோரி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
மதுரை

மதுரை காமராஜர் சாலை, தங்கம் நகரைச் சேர்ந்த கண்ணன் மனைவி செல்வி (வயது 27).
இவரது சகோதரர் வினோத் என்பவரை ஒரு கும்பல் கடந்த ஆண்டு கொலை செய்தது. இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. 

இந்த நிலையில் செல்வி நேற்று மதியம் தெப்பகுளம், மருதுபாண்டியர் சிலை அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த கருப்ப பிள்ளையேந்தல் கார்த்திக்ராஜா, கல்மேடு அருண்குமார் மற்றும் ஜோதிமணி ஆகிய 3 பேர், ‘வழக்கை வாபஸ் வாங்கு, இல்லையெனில் உன்னை கொலை செய்து விடுவோம்’ என்று மிரட்டி விட்டு தப்பிச் சென்றனர். 

இது தொடர்பாக செல்வி தெப்பகுளம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News