உள்ளூர் செய்திகள்
வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு
பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டத்தில் வாழைத்தார்களை வெட்டி உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ரூ.300- க்கும், கற்பூரவல்லி வாழைத்தார் ரூ. 300- க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.300- க்கும், பச்சநாடன் வாழைத்தார் ரூ.200- க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.300- க்கும் வாங்கிச் சென்றனர்.
இந்த வாரம் வாழைத்தார் வரத்து குறைவாக இருந்தன. இதனால் பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.400- க்கும், கற்பூரவல்லி வாழைத்தார் ரூ. 350- க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.350- க்கும், பச்சநாடன் வாழைத்தார் ரூ.275-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.350- க்கும் வாங்கிச்சென்றனர்.
வாழைத்தார் வரத்து குறைவாக இருந்ததால் வாழைத்தார் விலை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.