உள்ளூர் செய்திகள்
ஐ.ஐ.பி. லெட்சுமிராமன் குளோபல் பள்ளியில் புத்த பூர்ணிமா விழா
பாளை ஐ.ஐ.பி. லெட்சுமிராமன் குளோபல் பள்ளியில் புத்த பூர்ணிமா விழா நடந்தது.
நெல்லை:
பாளையில் உள்ள ஐ.ஐ.பி. லெட்சுமி ராமன் குளோபல் பள்ளி வளாகத்தில் புத்த பூர்ணிமா விழா நடைபெற்றது.
விழாவை பள்ளி செயலாளர் எஸ்.ஆர்.அனந்தராமன் தொடங்கி வைத்து புத்த பூர்ணிமாவின் சிறப்பை எடுத்துரைத்தார். விழாவில் ஐ.ஐ.பி. லெட்சுமி ராமன் குளோபல் பள்ளியின் நிர்வாகிகள் தனலெட்சுமி அனந்தராமன், தீபா ராஜ்குமார், ராஜேஸ்வரி சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளியில் உள்ள புத்தர் சிலையின் முன்பு அவரது துதி பாடல்களை பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் பாடினர். பள்ளி முதல்வர் இந்துமதி நன்றி கூறினார்.
பாளையில் உள்ள ஐ.ஐ.பி. லெட்சுமி ராமன் குளோபல் பள்ளி வளாகத்தில் புத்த பூர்ணிமா விழா நடைபெற்றது.
விழாவை பள்ளி செயலாளர் எஸ்.ஆர்.அனந்தராமன் தொடங்கி வைத்து புத்த பூர்ணிமாவின் சிறப்பை எடுத்துரைத்தார். விழாவில் ஐ.ஐ.பி. லெட்சுமி ராமன் குளோபல் பள்ளியின் நிர்வாகிகள் தனலெட்சுமி அனந்தராமன், தீபா ராஜ்குமார், ராஜேஸ்வரி சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளியில் உள்ள புத்தர் சிலையின் முன்பு அவரது துதி பாடல்களை பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் பாடினர். பள்ளி முதல்வர் இந்துமதி நன்றி கூறினார்.