உள்ளூர் செய்திகள்
மலர்கள்

கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாட்டம்- சென்னையில் 3 நாட்கள் மலர் கண்காட்சி

Published On 2022-05-14 09:58 GMT   |   Update On 2022-05-14 09:58 GMT
ஊட்டி, ஓசூர், திண்டுக்கல், பெங்களூரு, புனேவில் இருந்து 200 வகையான மலர்கள் கொண்டு வரப்பட்டு சென்னையில் 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
சென்னை:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சமீபத்தில் சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

வருகிற ஜூன் 3ந்தேதி கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட இருக்கிறது.

கருணாநிதி பிறந்தநாளில் சென்னையில் மலர் கண்காட்சிக்கு அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

கலைவாணர் அரங்கில் ஜூன் 3ந்தேதி முதல் 5ந்தேதி வரை 3 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.

ஊட்டி, ஓசூர், திண்டுக்கல், பெங்களூரு, புனேவில் இருந்து 200 வகையான மலர்கள் கொண்டு வரப்பட்டு கண்காட்சி நடத்தப்படுகிறது.

கண்காட்சியில் கருணாநிதி உருவ வடிவில் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் மலர் அலங்காரம் இடம் பெறுகிறது.

மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இக்கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட அரசு ஏற்பாடுகளை செய்கிறது.
Tags:    

Similar News