உள்ளூர் செய்திகள்
திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேரை வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் தேரில் ஏழ

திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேரோட்டம்

Published On 2022-05-13 09:49 GMT   |   Update On 2022-05-13 09:49 GMT
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் நடந்த சித்திரை திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
திருவையாறு:

தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

விழாவில் 9-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. 

இதனை முன்னிட்டு அறம் வளர்த்த நாயகி அம்மன், ஐயாறப்பர்  தனித்தனி பெரிய தேர்களிலும், பின்னால் விநாயகர், முருகன், ஆட்கொண்டார், சண்டிகேஸ்வரர், அகப்பை சித்தர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் தனித்தனி சிறிய தேர்களிலும் எழுந்தருளினர்.

மொத்தம் 2 பெரிய தேர்கள், 5 சிறிய தேர்கள் என 7 தேர்கள் அடுத்தடுத்து வலம் வந்தன.

தேரை கல்யாணபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.  

நான்கு ராஜவீதிகளிலும் 7 தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஆடி அசைந்து வலம் வந்தது. இன்று மாலையில் தேர்கள் அனைத்தும் கீழவீதி நிலையை அடைகிறது. அப்போது சிறப்பு ஆராதனைகள் நடக்கிறது. 

தேர் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் வருகிற 16-ந் தேதி சப்தஸ்தான பெருவிழா நடைபெற உள்ளது. 

Tags:    

Similar News