search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Therottam"

    • ஆண்டுதோறும் மாசி திருவிழா விமரிசையாக நடைபெறும்.
    • 21-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    திருவொற்றியூர்:

    சென்னை, திருவொற்றி யூரில் உள்ள வடிவுடை யம்மன் உடனுறை தியாகராஜசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான மாசி திருவிழாவையொட்டி கோவிலில் நாளை (14-ந்தேதி) இரவு 7 மணியளவில் விநாயகர் உற்சவம் நடக்கிறது. நாளை மறுநாள் (15-ந்தேதி) இரவு 8 மணிக்கு கொடியேற்றத்துடன் மாசி திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை சூரிய பிரபையில் சந்திர சேகரர் உற்சவம், மாலை 7.30 மணியளவில் சந்திர பிரபையில் உற்சவம், இரவு தியாகராஜ சுவாமி மாடவீதி உற்சவம் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 21-ந்தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் சந்திர சேகரர் சுவாமி திருத்தேர் புறப்பாடு நடைபெறுகிறது. அப்போது 47 அடி உயர மரத்தேரில் சந்திரசேகர சுவாமி திரிபுரசுந்தரியுடன் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வருகிறார்.

    தொடர்ந்து 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கல்யாண சுந்தரர்சுவாமி திருக் கல்யாண உற்சவமும், பிற் பகல் 2 மணியளவில் 63 நாயன்மார்கள் ஊர்வலமாக புறப்பட்டு மாடவீதி உற்சவமும் நடைபெறும். இரவு 9 மணி அளவில் சேவை உற்சவம் நடக்கிறது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பத்திரகாளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை மம்சாபுரம் சிவந்திபட்டி இந்து நாடார் உறவின்முறையினர் செய்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் சிவந்திப்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திரு விழா கடந்த 1-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் புரட்டாசி திரு விழாவில் தினசரி இரவு பத்திரகாளியம்மன் பல் வேறு சிறப்பு அலங்காரங் களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ் வான காலை பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய பத்திரகாளி யம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு, வடம் பிடித்து தேரை இழுத்தனர். மஞ்சள் தீர்த்த வாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை மம்சாபுரம் சிவந்திபட்டி இந்து நாடார் உறவின்முறையினர் செய்து வருகின்றனர்.

    • திருவிழா நடைபெறாமல் இருந்தது.
    • புதிய தேர் செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த சேஷச முத்திரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தேர் திருவிழா நடைபெற்றது. அதன் பின்னர் சில காரணங்களால் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் பக்தர்கள் இந்த ஆண்டு தேர் திருவிழா நடத்த முடிவு செய்தனர். இதற்கு புதிய தேர் செய்யப்பட்டது.

    இந்நிலையில் கோவிலில் தேர் திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் சக்தி அழைத்தல், ஊரணி பொங்கல், தேர் வெள்ளோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர்.

    பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். இதில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து அங்கிருந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர், தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை வந்த டைந்தது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெற்றதால் சேஷசமுத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழு வினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.தேர் திருவிழாவில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர்.

    • சிதம்பரத்தில் கூத்தாடும் பிள்ளையார் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • எட்டுவிதமான வாகனங்களில் பிள்ளையார் வீதியுலா நடைபெற்றது.

    கடலூர்: சிதம்பரம் பெரியார் தெருவில் உள்ள கூத்தாடும் பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாள்கள் உற்சவம் கடந்த செப்.9-ப் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

    தினந்தோறும் இரவு எட்டுவிதமான வாகனங்களில் பிள்ளையார் வீதியுலா நடைபெற்றது. 9-ம் நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேகம் ஆராதனை, விநாயகர் வீதி உலா நடைபெற்றது. பல்லக்கு உற்சவத்துடன் நாளை விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை ராமச்சந்திரன் தலைமையிலான பக்தர்கள் செய்திருந்தனர்.

    • தேரை அலங்கரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
    • கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியானது தேரோட்ட திருவிழா வருகிற 1-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதையொட்டி தேருக்கு புதிய வண்ண அலங்கார திரைச்சீலைகள் இணைத்தல், தேரின் 4 சக்கரங்கள், குதிரைகள் உள்ளிட்டவைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி, தேர்கட்டை முட்டு தள்ளுதலுக்கு உரிய பிரேக் ஆகியவை புதுப்பித்து சரிபார்க்கும் பணிகள் மற்றும் தடுப்பு வேலிகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் ஆலோசனையின் பேரில், கோவில் துணை ஆணையர் ராமசாமி நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தியும், பணியாளர்களின் பணிகளையும் பார்வையிட்டார் அப்போது கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • தினமும் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது.
    • ஆடித்தபசு திருவிழா திங்கட்கிழமை நடக்கிறது.

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. 7-ம் திருநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு பூம்பல்லக்கில் அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா 11-ம் திருநாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகிறார்கள்.

    • 2-ந்தேதி புஷ்ப சப்பரம் நடக்கிறது.
    • 3-ந்தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்று. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடி மாதம் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று காலையில் மேளதாளம் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் அலங்கரிக்கப்பட்ட தங்க கொடிமரத்தை சுற்றிலும் நாணல் புல், மாவிலைகள், வண்ணபூ மாலைகள் இணைக்கப்பட்டு கருடன் உருவம் பொறித்த கொடி காலை 10.25 மணிக்கு ஏற்றப்பட்டது. இதைதொடர்ந்து நூபுர கங்கை தீர்த்தத்தால் விசேஷ பூஜைகளும் தீபாராதனைகளும் பட்டர்களின் வேத மந்திரங்களுடன் நடந்தது.

    இதில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் சுந்தரராஜ பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் தீபாராதனை நடந்தது. அப்போது கொடிக்கம்பம் அருகில் நின்ற சுந்தரவல்லி கோவில் யானை துதிக்கையை தூக்கி ஆசிர்வதித்தது. முன்னதாக மூலவர் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதையடுத்து இன்று(செவ்வாய்கிழமை) காலையில் தங்க பல்லக்கு உற்சவமும், இரவில் சகல பரிவாரங்களுடன் சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

    26-ந்தேதி இரவு அனுமார் வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 27-ந்தேதி இரவு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். 28-ந் தேதி காலையில் 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் கோவிலில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று எழுந்தருளுகிறார். அன்று இரவு சேஷ வாகனத்தில் புறப்பாடு நடைபெறும்.

    29-ந்தேதி இரவு யானை வாகனத்திலும், 30-ந்தேதி இரவு புஷ்ப சப்பரத்திலும், 31-ந்தேதி இரவு தங்ககுதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 1-ந்தேதி காலையில் 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருத்தேரில் சுவாமி, தேவியர்களுடன் எழுந்தருளுகிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் 8.35 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் விழா நடைபெறும். அன்று இரவு பூப்பல்லக்கும், 2-ந் தேதி மாலையில் புஷ்ப சப்பரமும், 3-ந்தேதி உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.

    • 29-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 2-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

    மானாமதுரையில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற வீரஅழகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமிக்கு 11 வகையான திரவிய பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே உள்ள மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து அர்ச்சகர் கோபி தலைமையிலான அர்ச்சகர்கள் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மூலவர் சுந்தரராஜ பெருமாள் மற்றும் சவுந்தரவல்லி தாயாருக்கு காப்பு கட்டப்பட்டது. செட்டிகுளம் பகுதியில் கவுன்சிலர் லதாமணி, ராஜேந்திரன், முருகன் ஆகியோர் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட மண்டகப்படியில் சுவாமிகள் எழுந்தருளினர்.

    இதில் செட்டிகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா நடைபெறும் 10 நாட்களும் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் சிகர நிகழ்வாக 29-ந் தேதி இரவு திருக்கல்யாணம், ஆகஸ்டு 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    2-ந் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 4-ந் தேதி உற்சவ சாந்தியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் கோவில் தேவஸ்தான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜை, வழிபாடு நடக்கிறது.
    • 30-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருந்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை சிறப்பு பூஜைகளுக்கு பின் கோவில் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. அப்போது சவுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயார்-ஆண்டாள் அம்மையாருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவிழாவையொட்டி தினமும் கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெறுகிறது. மேலும் அன்னம், சிம்மம், கருடன், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆடிப்பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந்தேதி மாலை நடைபெற உள்ளது. இதில் தமிழக அமைச்சர்கள், அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் சுரேஷ், கோவில் செயல் அலுவலர் முருகன் ஆகியோர் தலைமையில் கோவில்பட்டி பட்டாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.

    • வாணவேடிக்கையோடு ஸ்ரீஅபிராமி எழுந்தருளினார்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனுறை அமிர்தகடே ஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நிகழாண்டு ஆடிப்பூர திருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் வீதி உலா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதனைத் தொடர்ந்து 9 ஆம் நாள் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது . பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையோடு ஸ்ரீஅபிராமி எழுந்தருளினார். இதனையடுத்து மேல வீதியில் இருந்து தேர் புறப்பட்டு வடக்கு வீதி, கீழவதி, தெற்கு வீதி வழியாக வலம் வந்து மீண்டும் மேலவீதியில் நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இதில் தி.மு.க. செம்பை மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில், கட்டளை தம்பிரான் சாமிகள், கோவில் கண்காணிப்பாளர் மணி, உள்துறை கண்கா ணிப்பாளர் விருத்தகிரி, கோவில் காசாளர் களியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    • இக்கோவில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் தேவாரபாடல் பெற்றது.

    மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் பிரசித்திபெற்ற நீலிவனநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் தேவாரபாடல் பெற்றது.

    இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும், சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக விசாலாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காலை 6.10 மணிக்கு தேரில் எழுந்தருளினார்.

    அதைத்தொடர்ந்து மதியம் 3.10 மணிக்கு மேள, தாளங்கள் முழங்க திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேர், தேரோடும் வீதி வழியாக வலம் வந்து மாலை 5.10 மணிக்கு நிலையை அடைந்தது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவிஆணையர் லட்சுமணன் மேற்பார்வையில், கோவில் செயல் அலுவலர் மனோகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். மண்ணச்சநல்லூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஆடிப்பூர திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மேளதாளங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்தில் அபிராமி அம்மன் தேரில் எழுந்தருளினார்.

    தரங்கம்பாடி:

    திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனுறை அமிர்தகடே ஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நிகழாண்டு ஆடிப்பூர திருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் வீதி உலா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதனைத் தொடர்ந்து 9 ஆம் நாள் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது . பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையோடு ஸ்ரீஅபிராமி எழுந்த ருளினார்.

    இதனையடுத்து மேல வீதியில் இருந்து தேர் புறப்பட்டு வடக்கு வீதி, கீழவதி, தெற்கு வீதி வழியாக வலம் வந்து மீண்டும் மேலவீதியில் நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இதில் தி.மு.க. செம்பை மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில், கட்டளை தம்பிரான் சாமிகள், கோவில் கண்காணிப்பாளர் மணி, உள்துறை கண்கா ணிப்பாளர் விருத்தகிரி, கோவில் காசாளர் களியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×